Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
மொபைல் அதிக நேரம் உபயோகித்தால் இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வரக் கூடும் !!-ஆய்வு
இப்போது பிறந்த குழந்தை கூட மொபைல் உபயோகிக்கின்றது. ,மொபைல், லேப்டாப் போன்ற மின் சாதனங்களால் கண், மூளை வளர்ச்சி பாதிக்கும் என்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விஷயம்தான்.
ஆனால் என்ன சொன்னாலும் இந்த காதில் கேட்டு அந்த காதில் விட முடியாதபடி மொபைல் வைத்தக் கொள்கிறோம். எப்போதும் வாட்ஸ் அப், சமூக வலைதளங்கள் என 24 மணி நேரமும் மொபைலை குனிந்து பார்த்தபடியேதான் நாம் உட்காருகிறோம், நடக்கிறோம், படுக்கிறோம்.

ஆனால் இவைகளை தொடர்ந்து உபயோகித்தபடியிருந்தால், முதுமைதோற்றம் இளம் வயதிலேயே எட்டிப்பார்த்துவிடும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து குனிந்தபடி மொபல் அல்லது லேப்டாப் பார்த்தபடி இருந்தால், சருமம் தொங்க ஆரம்பித்துவிடும். கண்களுக்கு அடியில் சதைப்பை ஆரம்பிக்கும். சுருக்கங்கள் இளம் வயதிலேயே மெல்லிய கோடுகளாய் விழுந்துவிடும்.
குனிந்தபடியே பார்ப்பதால், கழுத்து, முதுகு, மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் வலிகள் ஆரம்பித்து, தசைகளில் இறுக்கமான நிலை தோன்றி அடுத்து எலும்புகள் பாதிக்க ஆரம்பிக்கும் என அச்சுறுத்துகின்றார் மும்பையிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உள்ள வினோத் ஜி என்ற காஸ்மெடிக் நிபுணர் கூறுகின்றார்.
இன்டர்னெட் மற்றும் மொபைல் அஸோஸியேஷன் இந்தியா (IAMAI) கூறுவது என்னவென்றால், ஜூன் 2016 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 371 மில்லியன் மக்கள் மொபைலை உபயோகிக்கின்றனர். இவர்களில் 40 சதவீதம் அதிகம் உபயோகிப்பது , 19-30 வரை உள்ள இளம் வயதினர்.
மொபைலால் உண்டாகும் உடல் பிரச்சனைகள் ;
விரல்களில் உள்ள மூட்டுகளின் இணைப்புகள் பலவீனமாகிவிடும். விரல்கள் , முழங்கைகளின் வீக்கம் உண்டாகும், முதுகுத் தண்டுவடம் பாதிக்கும். தலைவலி, கண்பார்வை போன்றவை பாதிக்கும்.
இது தவிர்த்து, குனிந்து கொண்டிருக்கும் போது, கழுத்துத் தசைகள், ஈர்ப்புத்தன்மையால் முகத்திலுள்ள தசைகளையும் சருமத்தையும் இழுக்கும். இதனால் சருமத்தில் தொய்வு ஏற்படும். இரட்டை நாடி, கண்களுக்கு அடியில் சதை தொங்குதல் என இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் பெறுவீர்கள் என கூறுகின்றனர் சரும நிபுணர்கள்.
இந்த எல்லா பிரச்சனைகளையும் சேர்த்து பாதிக்கப்படும்போது இதனை மருத்துவ குறிப்பில், " ஸ்மார்ட் ஃபோன் ஃபேஸ் " என்று கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















