Latest Updates
-
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
சர்க்கரை நோயாளிகளுக்கு அமைதியான மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? அதனை தடுக்க என்ன சோதனை செய்யணும் தெரியுமா?
மாரடைப்பு உலகில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்குகிறது. உலகில் அதிக மக்களின் உயிரைப் பறிக்கும் முதல் நோயாக மாரடைப்பு மாறியுள்ளது. மாரடைப்பு யாரை வேண்டுமென்றாலும் பாதிக்கலாம் என்றாலும் சில நோய்கள் இருப்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம். நீரிழிவு நோயாளிகளிடையே அமைதியான மாரடைப்பு என்பது மிகவும் பொதுவானது,
பொதுவாக அறிகுறிகள் அதிகமாக இருக்கும் இதயம் மற்றும் மார்புப் பகுதிக்கு வழங்கும் நரம்புகள் நீரிழிவு நோயால் சேதமடைகின்றன. மேலும் சர்க்கரை நோயாளிகளிடம் சாதாரண நோயாளிக்கு இருக்கும் அறிகுறிகள் இருக்காது. பெரும்பாலும், நீரிழிவு நோயாளிகள் சோர்வு, மூச்சுத்திணறல், சோர்வு, சில தெளிவற்ற வயிற்று அசௌகரியம் போன்ற அறிகுறிகளை உணர்வார்கள், இவை பெரும்பாலும் அமிலத்தன்மை அல்லது பொதுவான பலவீனத்தின் அறிகுறிகளாக தவறாக மதிப்பிடப்படுகின்றன.
மேலும் இவை பெரும்பாலும் மாரடைப்புகளாக மாறிவிடும். பெரும்பாலான மாரடைப்புகள் முற்றிலும் அமைதியாக இருப்பதில்லை என்பதை மறந்து விடக்கூடாது. பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளின் அலட்சியத்தாலேயே அமைதியான மாரடைப்பு தீவிரமான சிக்கலாக மாறுகிறது.

நீரிழிவு நோயாளிகள் ஒருபோதும் இதய அறிகுறிகளுடன் ஒரே மாதிரியான அறிகுறிகளை தொடர்புபடுத்த மாட்டார்கள். பெரும்பாலும், அவை அமிலத்தன்மை என்று தவறாகக் கண்டறியப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பின் அறிகுறி பொதுவாக அஜீரணம் என தவறாகக் கருதப்படுகிறது. சில நேரங்களில் நோயாளிகள் தாடை வலியை அனுபவிக்கின்றனர், ஆனால் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் பல் மருத்துவரை சென்று பார்க்கின்றனர், இதை மாரடைப்பின் அறிகுறியாக அவர்கள் நினைப்பதில்லை.
இந்தியர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்
இந்தியர்கள் மாரடைப்பு விவகாரத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா உலகின் சர்க்கரை நோயின் தலைநகரமாக இருக்கிறது. இந்தியர்கள் அவர்களின் வழக்கமான இரத்தக் கொலஸ்ட்ரால் மதிப்புகள், இதய நோய் இருப்பதற்கான சில அறிகுறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் சோதனை செய்யப்பட வேண்டும், மேலும் வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் முடிந்தால் மன அழுத்த பரிசோதனையையும் செய்ய வேண்டும்.
யாரெல்லாம் ஆபத்தில் உள்ளனர்?
CT கரோனரி ஆஞ்சியோகிராம்கள் தற்போது ஒரு பொதுவான சோதனைகளாகி விட்டன, இருப்பினும் அனைத்து சர்க்கரை நோயாளிகளும் வழக்கமான ஸ்கிரீனிங் கருவியாக CT ஆஞ்சியோகிராம்களை செய்ய வேண்டுமென்று அவசியமில்லை. சில நோயாளிகள் நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம், குடும்பத்தில் மாரடைப்பு வரலாற்றைக் கொண்டவர்கள் அல்லது புகைபிடித்தல், உடல் பருமன் போன்ற பல ஆபத்து காரணிகளைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அதிக ஆபத்தில் உள்ளனர்.
சோதனைகள்
சர்க்கரை நோயாளிகள் மாரடைப்பால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர், நிச்சயமாக அவர்கள் CT ஆஞ்சியோகிராம் செய்து, இந்த நோயாளிகளுக்கு எந்தவிதமான அடைப்புகளும் இல்லை என்று உறுதி செய்யலாம். பொதுவாக மன அழுத்த சோதனை, அல்லது TMT என பிரபலமாக அழைக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பெரிய அடைப்புகளுக்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்ள உதவும். இந்த அழுத்த சோதனையின் உணர்திறன் சுமார் 75 முதல் 80% ஆகும். எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் ஏற்படும் அனைத்து அறிகுறிகளையும் கவனிக்க வேண்டும் மற்றும் அடிக்கடி மேற்கண்ட சோதனைகளை செய்து உள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
