Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...!
உடலின் வெளியில் உள்ள உறுப்புகளை விட அவற்றின் உள்ளே இருக்கும் ஒவ்வொரு அணுக்களும் மிக முக்கியமானவை. குறிப்பாக ரத்தத்தில் உள்ள அணுக்கள் மற்றவற்றை காட்டிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நமது உடல் முழுக்க இவை நிரம்பி உள்ளது. கிட்டத்தட்ட நமது உயிர் கூட இந்த ரத்த அணுக்களிடம் தான் இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு, எவ்வாறு இதன் எண்ணிக்கையை உயர்த்துவது என்பதை இனி அறிவோம்.

ரத்த அணுக்கள் குறைவது ஏன்..?
ரத்த அணுக்கள் உடலுக்கு மிக அவசியமான ஒன்றாகும். இதன் எண்ணிக்கை குறைவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இவை உள்ளுக்குள்ளே அழிந்து வருவது. வேறொரு காரணம் இவற்றின் உற்பத்தி குறைந்து விடுவது. மேலும், ரத்த சோகை, ஊட்டசத்து குறைபாடு, வைரஸ் தொற்றுகள் ஆகியவற்றாலும் இவற்றின் எண்ணிக்கை குறைவதுண்டு.

அஸ்வகந்தா
மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு அதிக பலத்தை தருகிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து விதமான பிரச்சினைக்கும் இவை தீர்வை தருகிறது. தினமும் வெது வெதுப்பான நீரில் அஸ்வகந்தா பொடியை சிறிது சேர்த்து உண்டாலே ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தி விடலாம்.

வல்லாரை
மூளையின் செயல்திறனை பன்மடங்காக அதிகரிக்க இந்த வல்லாரை நன்கு உதவும். அதே போன்று இவை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இவற்றை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் பல வித பயன்கள் விரைவிலே கிடைக்கும்.

கற்றாழை சாறு
ரத்த அணுக்கள் உடலில் மிகவும் குறைவாக இருந்தால், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு அருமையன வழி உள்ளது. தினமும் கற்றலை சாற்றை குடித்து வந்தால் அணுக்களின் எண்ணிக்கை தானாகவே உயர தொடங்கும். ஏனெனில், இதில் 200 வகையான மூல பொருட்கள் உள்ளன.

நெல்லிக்காய்
தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம் என பல ஆயிரம் வருடத்திற்கு முன்னரே சித்தர்கள் ஓலை சுவடிகளில் பதிந்து உள்ளனர். அந்த வகையில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை இந்த நெல்லிக்காய் அதிகரிக்க செய்கிறது. இதற்கு தினமும் நெல்லிக்காய் பொடியை 2 முறை தேனுடன் 1 ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

முளைக்கீரை
வைட்டமின் பி9 நிறைந்துள்ள உணவு பொருட்களில் இந்த முளைக்கீரை முதன்மையானது. செல்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் இந்த கீரை நன்கு உதவும். முளைக்கீரை ஜுஸ் அல்லது சாப்பாட்டில் இதனை சேர்த்து கொண்டாலே போதும்.

கோதுமை புல்
மெக்னீசியம், ஜின்க், அந்தோ ஆக்சிடன்ட்ஸ் போன்ற சத்துக்கள் இந்த கோதுமை புல்லில் அதிகம் நிறைந்துள்ளது. ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இந்த மூலிகை அருமையாக பயன்படுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும், ரத்த சோகை நோய்களை குணப்படுத்தவும் இந்த கோதுமை புல் உதவுகிறது.

எலுமிச்சை
வைட்டமின் சி அதிகமாக எலுமிச்சையில் உள்ளதால் உடலுக்கு அதிக நன்மைகளை தரவல்லது. ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த எலுமிச்சை சாற்றை தினமும் காலை வேளையில் குடித்து வந்தாலே போதும். மேலும், இவற்றை அழிவில் இருந்தும் எலுமிச்சை காத்து கொள்ளும்.

சீந்தில்
ஆயுர்வேத மூலிகைகளில் இந்த சீந்தில் பல மகத்துவங்களை கொண்டது. ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த இந்த மூலிகையை சாப்பிட்டாலே போதும். இவை ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி அலர்ஜிக் தன்மையை கொண்டுள்ளது. மேலும், எதிர்ப்பு சக்தியை இந்த மூலிகை அதிகரிக்கவும் உதவுகிறது.

உணவின் தேவை..!
பச்சை காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை உணவாவில் அதிகம் சேர்த்து கொண்டால் இது போன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம். மேலும், இயற்கை ரீதியான உணவு பொருட்களை சாப்பிட்டால் நலமோடு வாழலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications