Just In
- 7 min ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- 41 min ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- 3 hrs ago ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
Don't Miss
- Movies மனோகரி கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
- Finance 70000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்தில் இறங்கிய ஊழியர் அமைப்புகள்..!!
- News பாஜகவோட போயிட்டீங்களா.. இப்போ பாருங்க.. கூண்டோடு காலியான பாமக டீம்.. அன்புமணி ஷாக்!
- Technology கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
தர்ப்பை புல்லை ஏன் இந்து சமயத்தில் பூஜைகளில் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
தர்ப்பையின் ஆயுர்வேத பண்புகளை இந்த கட்டுரையின் மூலம் காணலாம்.
தர்ப்பை புல், இந்த பெயரைக்கேட்டாலே, அநேகம் பேருக்கு இது என்ன புல் என்றே கேட்பர். இன்றைய நாகரிக உலகில் தர்ப்பை என்பது, வெகு சிலர் மட்டுமே, அதுவும் சமயச்சடங்குகளில் மட்டுமே, பயன்படுத்தும் ஒரு விசயமாக ஆகிவிட்டது.
விஷயம் அப்படியல்ல, நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம், நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே, நாம் அவற்றின் காரணம் உணராமல், அவற்றை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு அதன் எளிமையான பயன்பாட்டை புறக்கணிக்கிறோம், அவமதிக்கிறோம், அப்படி முன்னோர் வகுத்த வாழ்வியல் நெறியில், ஒரு சூட்சுமமாக செயலாற்றுவதுதான், தர்ப்பை புல்.
உலகம் தோன்றியபோதே தோன்றிய தொன்மையான புல், என தர்ப்பை புல்லை முன்னோர் போற்றுவர்.சித்தர்கள் முதல், சாமானியர் வரை மலைகளுக்கு சென்றே, தவம் செய்ய விரும்பினர், ஏன் எனத் தெரியுமா?
கோவில்களில் தரிசனம் செய்யச் செல்லும்போது, விநாயகர், மூலவர், அம்பாள் என பல சன்னதிகள் இருந்தாலும், நாம் கோவிலின் கொடி மரம் முன் மட்டுமே தரையில் விழுந்து வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனரே, ஏன் எனத் தெரியுமா?
சிற்றறிவின் துணைகொண்டு, பேரறிவின் தத்துவத்தை அறிய முயல்வோம்.
தர்ப்பை புல்லில் தாமிர சத்து அதிக அளவில் நிரம்பி இருப்பதால், அது சிறந்த ஆற்றலை கடத்தும் சாதனமாக அறியப்படுகிறது. நவீன கால விஞ்ஞான வளர்ச்சிகளில் அகலக்கற்றை அலைவரிசைகளை இணைக்கும் தொடர்புகளில் நுண்ணிய ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களைவிட, தாமிர கேபிள்களே, சிறந்த இணைய வேகத்திற்கு துணைபுரிகின்றன என்பதிலிருந்து, தாமிரத்தின் ஆற்றலை நாம் அறிய முடியும்.
இதைவிட, அனுபவரீதியில் தர்ப்பை புல்லின் மகத்துவம் அறிய வேண்டுமென்றால், கோவில்களில் நாம் தரிசனம் செய்துவிட்டு, கொடிமரம் அருகே விழுந்து வணங்குகிறோம் அல்லவா?
அங்கு கொடிமரங்களில் கட்டப்பட்டிருக்கும் தர்ப்பை புல் மேலும் கொடிமரத்தின் அருகே வளர்ந்திருக்கும் தர்ப்பை புற்கள், அண்டத்தின் காந்த சக்தியை அவ்விடத்தில் ஒருமித்து வெளியிட்டு, தரையில் விழுந்து வணங்குபவர்களின் உடல் வழியே, அந்த ஆற்றலை அவர்களுக்குள் செலுத்துவதனாலே, உடல் மற்றும் மனதில் இனம்புரியாத நிம்மதி உணர்வை அடைவதை அவர்கள் உணரமுடியும்.
இது போலவே, தர்ப்பை புல்லில் ஊறிய நீரும், தூய்மையையும் உடலுக்கு நலத்தையும் தருவதாகும். கோவில் கும்பாபிஷேகங்களில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியபின், அந்த நீரை, கூடியுள்ள மக்களின் மீது தெளிப்பதன் விளக்கமும் இதுதான்.