For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தர்ப்பை புல்லை ஏன் இந்து சமயத்தில் பூஜைகளில் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

தர்ப்பையின் ஆயுர்வேத பண்புகளை இந்த கட்டுரையின் மூலம் காணலாம்.

By Gnaana
|

தர்ப்பை புல், இந்த பெயரைக்கேட்டாலே, அநேகம் பேருக்கு இது என்ன புல் என்றே கேட்பர். இன்றைய நாகரிக உலகில் தர்ப்பை என்பது, வெகு சிலர் மட்டுமே, அதுவும் சமயச்சடங்குகளில் மட்டுமே, பயன்படுத்தும் ஒரு விசயமாக ஆகிவிட்டது.

விஷயம் அப்படியல்ல, நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம், நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே, நாம் அவற்றின் காரணம் உணராமல், அவற்றை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு அதன் எளிமையான பயன்பாட்டை புறக்கணிக்கிறோம், அவமதிக்கிறோம், அப்படி முன்னோர் வகுத்த வாழ்வியல் நெறியில், ஒரு சூட்சுமமாக செயலாற்றுவதுதான், தர்ப்பை புல்.

உலகம் தோன்றியபோதே தோன்றிய தொன்மையான புல், என தர்ப்பை புல்லை முன்னோர் போற்றுவர்.சித்தர்கள் முதல், சாமானியர் வரை மலைகளுக்கு சென்றே, தவம் செய்ய விரும்பினர், ஏன் எனத் தெரியுமா?

கோவில்களில் தரிசனம் செய்யச் செல்லும்போது, விநாயகர், மூலவர், அம்பாள் என பல சன்னதிகள் இருந்தாலும், நாம் கோவிலின் கொடி மரம் முன் மட்டுமே தரையில் விழுந்து வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனரே, ஏன் எனத் தெரியுமா?

சிற்றறிவின் துணைகொண்டு, பேரறிவின் தத்துவத்தை அறிய முயல்வோம்.

Why we use dried grass while performing pooja according to Hinduism

தர்ப்பை புல்லில் தாமிர சத்து அதிக அளவில் நிரம்பி இருப்பதால், அது சிறந்த ஆற்றலை கடத்தும் சாதனமாக அறியப்படுகிறது. நவீன கால விஞ்ஞான வளர்ச்சிகளில் அகலக்கற்றை அலைவரிசைகளை இணைக்கும் தொடர்புகளில் நுண்ணிய ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களைவிட, தாமிர கேபிள்களே, சிறந்த இணைய வேகத்திற்கு துணைபுரிகின்றன என்பதிலிருந்து, தாமிரத்தின் ஆற்றலை நாம் அறிய முடியும்.

இதைவிட, அனுபவரீதியில் தர்ப்பை புல்லின் மகத்துவம் அறிய வேண்டுமென்றால், கோவில்களில் நாம் தரிசனம் செய்துவிட்டு, கொடிமரம் அருகே விழுந்து வணங்குகிறோம் அல்லவா?

அங்கு கொடிமரங்களில் கட்டப்பட்டிருக்கும் தர்ப்பை புல் மேலும் கொடிமரத்தின் அருகே வளர்ந்திருக்கும் தர்ப்பை புற்கள், அண்டத்தின் காந்த சக்தியை அவ்விடத்தில் ஒருமித்து வெளியிட்டு, தரையில் விழுந்து வணங்குபவர்களின் உடல் வழியே, அந்த ஆற்றலை அவர்களுக்குள் செலுத்துவதனாலே, உடல் மற்றும் மனதில் இனம்புரியாத நிம்மதி உணர்வை அடைவதை அவர்கள் உணரமுடியும்.

இது போலவே, தர்ப்பை புல்லில் ஊறிய நீரும், தூய்மையையும் உடலுக்கு நலத்தையும் தருவதாகும். கோவில் கும்பாபிஷேகங்களில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியபின், அந்த நீரை, கூடியுள்ள மக்களின் மீது தெளிப்பதன் விளக்கமும் இதுதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why we use dried grass while performing pooja according to Hinduism

Why we use dried grass while performing pooja according to Hinduism
Story first published: Wednesday, October 11, 2017, 22:39 [IST]
Desktop Bottom Promotion