Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
மாவிலையைப் பற்றி கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை:
இந்தியாவில் இந்துக்களின் எல்லா விசேஷங்களிலும் துளசி , மாவிலை இல்லாமல் இருக்காது. விசேஷங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதைத் தவிர வேறு என்ன மாவிலையைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இல்லையென்றால் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மாவிலையில் ஃபீனால், மற்றும் ஃப்ளேவினாய்டு அதிகம் உள்ளது. குறிப்பாக மாவிலை கொழுந்து அதிக சத்துக்களை கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை வியாதி:
அடர் சிவப்பு கலந்த மாவிலை துளிர்கள் அற்புத குணங்களை கொண்டுள்ளது. அவைகள் டேனின் எனப்படும் ஆந்தோ சயனிடின் என்ற பொருளை கொண்டுள்ளது. இந்த நிறமி சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும். மாவிலைகளை காயவைத்து பொடி செய்து அதனை தேநீர் செய்து குடித்தாலும் சர்க்கரைவியாதி கட்டுக்குள் வரும்.
ரத்தக் கொதிப்பு :
ரத்தக் கொதிப்பினை குறைக்கச் செய்யும் வலிமை மாவிலைகளுக்கு உண்டு. மாவிலையை காய வைத்து பொடி செய்து ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மாவிலைப் பொடியை கலந்து கொதிக்க விடவும். நன்றாக அதன் நிறம் நீரில் உள்ளிறங்கியதும், வடிகட்டுங்கள். இந்த மாவிலை தேநீரைக் தொடர்ந்து ஒரு வாரம் குடித்தால், உங்கள் ரத்தக் கொதிப்பு குறைந்திருப்பதை பரிசோதித்து கண்டுகொள்ளலாம்.
வயிற்றுப் போக்கு :
கடுமையான வயிற்றுப் போக்கு இருந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும். இது மிகவும் அபாயகரமானது. வயிற்றுப் போக்கை கட்டுக்குள் வைத்திட மாவிலை உதவி செய்கிறது. மாவிலைப் பொடியை நீரில் நீரில் கலந்து தினமும் இருவேளை குடித்தால், நிலமை சீராகும்.
பசியின்மை :
மாவிலையில் விட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. மற்றும் ஜீரணத்தை தூண்டும் பெப்பைன் என்ற என்சைமும் உள்ளது. இவை ஜீரண சக்தியை அதிகரிக்கும். தேவையான ஊட்டத்தை அளிக்கும். பசியை ஏற்படுத்தும். தினமும் மாவிலைக் கொழுந்து சாப்பிட்டு வர, பசி அதிகரிக்கும்.
மருக்கள் மறைய :
பெரிய மாவிலைகளை அரைத்து, மருக்கள் இருக்கும் இடத்தில் பூசினால் மருக்கள் விரைவில் உதிர்ந்துவிடும். காயங்களுக்கும் மருந்தாக இதனை போட்டால், ரத்தம் வருவது நின்று, காயம் எளிதில் ஆறும்.
மனத் தளர்ச்சி, பதட்டம் :
மாவிலைகள் ஒரு அமைதியான நிலையை உடலில் உருவாக்கும். நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்தி, மனதிற்கு நிதானத்தை தரும் சூழலைக் கொண்டு தரும்.
சிறு நீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரைய :
மாவிலைகள் சிறுநீரகத்தில் மற்றும் பித்தப்பையில் ஏற்படும் கற்களை கரைக்கச் செய்யும். தினமும் மாவிலைப் பொடியை ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்தால், விரைவில் பிந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
















