Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
தோல் புற்றுநோயை தடுக்கும் அழிஞ்சல்!

அனஞ்சி என அழைக்கப்படும் அழிஞ்சில் மரம் தென்னிந்தியா, மியான்மர் போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் விதை, பட்டை வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இது மனித உடலில் ஏற்படும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்களையும் சீராக்கும் தன்மை கொண்டது அழிஞ்சல். அதேசமயம் இது பித்தத்தை அதிகரிக்கும் என்று தேரையர் நளவெண்பாவில் கூறப்பட்டுள்ளது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
நான்கு அல்கலாய்டுகள் இதில் அடங்கியுள்ளன. ஐசோலேட்டுகளின் பிரிவுகளும் இதில் காணப்படுகின்றன.வெனோட்டர்பைன், அன்கோரின், செபேலின், மற்றும் சைகோட்ரின் போன்றவையாகும்
விஷநீர் வெளியேறும்
அழிஞ்சில் பட்டையை இடித்து தூளாக்கி நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தி வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசத் தாதுக்களை வெளியேற்றும். இந்த கசாயம் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர்கள் வெளியேறும்.
தோல் புற்றுநோய்
இந்த மரத்தின் வேரானது தோல் புற்றுநோயை நீக்குவதற்கு மருந்தாக பயன்படுகிறது. பாம்புகடி, தேள்கடி, நாய்கடி போன்றவைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இதயநோய்களை குணப்படுத்துகிறது.
குடல்புண்ணை ஆற்றும்
மரப் பட்டையின் குடிநீர் உடல் சூட்டைத் தணிக்கும். உடலானது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை குணமாக்கும் தன்மையடையது. வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடல் புண்ணை ஆற்றும்.மலச்சிக்கலைப் போக்கும். நாள்பட்ட மலத்தை இளக்கும் தன்மை கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். வியர்வையைத் தூண்டி சருமத்தைப் பாதுகாக்கும்.
குஷ்ட நோய் குணமாகும்
விதையைக் காயவைத்து அதன் பருப்பை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தினால் இளைத்த உடல் தேறும். அழிஞ்சலின் வேர்ப்பட்டையை காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மேகப்புண், சீழ் வடிகின்ற புண், சொறி, சிரங்கு மீது தடவி வர புண்கள் விரைவில் ஆறும். விதையிலிருந்து எடுக்கப்படும் தைலம் குஷ்ட நோய்க்கு பயன்படுத்தப் படுகிறது.
முகச் சுருக்கம் நீங்கும்
இதன் பட்டை மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் மூட்டுவலி, கீழ்வாதம் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கும். பாத வெடிப்பு, பாத எரிச்சலுக்கு இத்தைலத்தைத் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முகப்பரு, முகத்தில் சுருக்கம், முகக் கருமை போக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications