இந்த காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் அதிகமாக இருக்காம்... ஜாக்கிரதை...!

பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமான உணவுமுறையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். அவை நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை குறைவில்லாமல் வழங்குகின்றன. இருப்பினும், இந்த உணவுகள் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது,

குறிப்பாக அவற்றில் பூச்சிக்கொல்லிகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது. ஒவ்வொரு ஆண்டும், சுற்றுச்சூழல் பணிக்குழு (EWG) அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகளைக் கொண்ட உணவுப்பொருட்களை அடையாளம் காணும் பட்டியலை வெளியிடுகிறது. பூச்சிக்கொல்லிகள் அதிகம் உள்ள பொதுவான உணவுப்பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Fruits and Vegetables With Highest Level of Pesticides in Tamil

ஸ்ட்ராபெர்ரிகள்

ஸ்ட்ராபெர்ரி EWG-ன் மிகவும் ஆபத்தான உணவுப்பொருட்களில் முதலிடத்தில் உள்ளது. 99% க்கும் அதிகமான ஸ்ட்ராபெர்ரி மாதிரிகளில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக சோதிக்கப்பட்டது. ஆபத்தான வகையில், இந்த ஸ்ட்ராபெர்ரிகளில் பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களைக் கொண்டிருந்தது. இந்த இரசாயனங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை. அதிக பூச்சிக்கொல்லி அளவுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

முட்டைக்கோஸ்

கீரைகள், முட்டைக்கோஸ் மற்றும் காலே போன்றவையும் பூச்சிக்கொல்லிகளால் பெரிதும் மாசுபடும் உணவுகளாகும். இந்த காய்கறிகளில் 103 விதமான பூச்சிக்கொல்லிகளை EWG கண்டறிந்துள்ளது. தோராயமாக 60% காலே மாதிரிகள் புற்றுநோயை ஏற்படுத்தும் DCPA பூச்சிக்கொல்லிகளைக் கொண்டுள்ளது. பலவிதமான பூச்சிக்கொல்லிகளின் இருப்பு இந்த பிரபலமான ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதில் உள்ள ஆபத்தை அதிகரிக்கிறது.

திராட்சை

திராட்சை மாதிரிகளில் 90% க்கும் அதிகமானவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கொண்டிருந்தன. எனவே திராட்சைகளை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். திராட்சைகளில் அதிக பூச்சிக்கொல்லி எச்சங்களால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் காலப்போக்கில் மிகவும் அபாயகரமானதாக மாறலாம். முடிந்தவரை ஆர்கானிக் திராட்சைகளை வாங்குவது நல்லது.

பேரிக்காய்

பேரிக்காய் மாதிரிகளில் கிட்டதட்ட 61% பேரிக்காய்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டன. இந்த மாதிரிகளில் மொத்தம் 64 வெவ்வேறு பூச்சிக்கொல்லிகள் அடையாளம் காணப்பட்டன. பேரிக்காய்களில் பூஞ்சை மற்றும் பிற பூஞ்சை நோய்களைத் தடுக்க கார்பென்டாசிம் என்ற பூஞ்சைக் கொல்லியைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது நாளடைவில் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

ஆப்பிள்

உலகளவில் அதிகளவு மக்களால் விரும்பி உண்ணப்படும் பழமாக ஆப்பிள் உள்ளது. சோதனை செய்யப்பட்ட வழக்கமான ஆப்பிள் மாதிரிகளில் 90% க்கும் அதிகமான ஆப்பிள்களில் குறைந்தது இரண்டு பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதை EWG கண்டுபிடித்தது. உண்மையில், கிட்டத்தட்ட 80% ஆப்பிள்களில் டிஃபெனிலமைன் என்ற இரசாயனப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது, இது ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லியாகும், ஏனெனில் இது ஆரோக்கியத்தில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். எனவே ஆர்கானிக் ஆப்பிள்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

தக்காளி

தக்காளி, குறிப்பாக வழக்கமான விவசாய முறைகளில் வளர்க்கப்படும் தக்காளியில், பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க பூச்சிக்கொல்லிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பேக்கிங் சோடாவில் தக்காளியை ஊறவைப்பதே பூச்சிக்கொல்லிகளை சுத்தம் செய்ய சிறந்த மற்றும் எளிதான வழி.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, December 26, 2024, 22:33 [IST]
Desktop Bottom Promotion