Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா?
வேர்க்கடலை விலை மட்டும்தான் குறைவானது. ஆனால் அதிலுள்ள சத்துக்கள் அபாரமானது. நிறைய புரதம் நிறைந்த ஒரு உணவுப் பொருள்.
பொதுவாக வேர்க்கடலை அதிக கொழுப்பு உள்ளது. எனவே உடல் பருமனாகிவிடும். சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது என சொல்வார்கள். இதைப் பற்றி உண்மை என்ன என தெரிந்து கொள்ளலாமா?

இதய நோய்?
வேர்க்கடலையில் நல்ல கொழுப்புகள் தான் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் இதய நோய் அல்லது ரத்த அழுத்தம் அதிகமாகும் என பரவலாக சொல்கிறார்கள்.
ஆனால் உண்மையில் வேர்க்கடலை சாப்பிட்டால் இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் வருவது குறைக்கப்படுகிறது என ஜாமா ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சியை சமர்ப்பித்துள்ளது.

சர்க்கரை வியாதி :
வேர்க்கடலை சாப்பிடுவதால் குளுகோஸ் அளவு ரத்தத்தில் அதிகமாவதில்லை. மிகக் குறைவாகவே குளுகோஸ் அளவு அதிகரிக்கிறது.
அதோடு இதில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டால் நன்மைகளே தருகிறது.

ரத்த அழுத்தம்?
பொதுவாக உணவு சாப்பிட்டபின் குளுகோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால் வேர்கக்டலை சிறிது சாப்பிட்டால், உணவிற்கு பின்னும் குளுகோஸ் அளவு குறையச் செய்ய முடியும். அதோடு சோடியம் அளவையும் கட்டுப்படுத்துவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

உடல் எடை குறையும் :
வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது என ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷன் என்ற மருத்துவ இதழ் கூறியிருக்கிறது.
அதோடு பசியின்மையை ஏற்படச் செய்யும். குறைவாக சாப்பிட்டாலெ வயிறு நிறைந்துவிடும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்வை சாப்பிட தூண்டாது.
இதனை ஸ்நேக்ஸாக குழந்தைகளுக்கு தரும்போது உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

புற்று நோய் :
வேர்க்கடலை புற்று நோய் உருவாவதை தடுக்கிறது. மார்பக புற்று நோய், மலக் குடல் ஆகியவற்றை வராமல் காக்கின்ரன. புற்று நோய் செல்களையும் அழித்து மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் ஆற்றலுள்ள உயிர் வேதிப் பொருட்கள் வேர்க்கடலையில் உள்ளது.

வேர்க்கடலையை எப்படி சாப்பிடலாம் :
வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து சாப்பிட வேண்டாம். அதனை அவித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.அதேபோல் அதிலுள்ள சன்னமான தோலை நீக்காமல் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அதில்தான் அதிக சத்துக்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications