For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்புல ரத்தம் கம்மியா இருக்கா? இந்த 4 இலையோட சாறையும் சேர்த்து குடிங்க... கிடுகிடுன்னு ஏறும்...

சமானியர்களுக்கு புரியாத வார்த்தையாக இருந்தாலும் மருத்துவ துறையில் அதிகம் புழங்கும் வார்த்தை தான் இது. சரியாக பிளேட்லெட்டை தமிழில் மொழி பெயர்த்தால் "குருதிச்சிறுதட்டுகள்" என்று கூறலாம்.

By Suveki
|

பிளேட்லெட் என்றால் என்ன? உடம்பில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி? சமானியர்களுக்கு புரியாத வார்த்தையாக இருந்தாலும் மருத்துவ துறையில் அதிகம் புழங்கும் வார்த்தை தான் இது. சரியாக பிளேட்லெட்டை தமிழில் மொழி பெயர்த்தால் "குருதிச்சிறுதட்டுகள்" என்று கூறலாம். உடல் குணாதிசயத்தை உருவாக்கும் இந்த குருதிச்சிறுதட்டுகள். ஆனால் இந்த பிளேட்லெட் எனும் குருதிச்சிறுதட்டு நம் உடம்பில் இல்லை என்றால் உடம்பில் ரத்தம் உறைந்து நாமும் உயிரில்லா உடம்பாகி உறைந்து போவோம். இரத்த செல்களைப் போல் தான் இந்த பிளேட்லெட்களும். அதாவது நமது ரத்தத்தில் வெள்ளை, சிவப்ப ரத்த அணுக்களை விட அளவில் சிறியவை. இந்த பிளேட்லெட் குருதிச்சிறுதட்டுகள் நம் உடம்பில் போல கோடி எண்ணிக்கையில் இருக்கிறது. அதுவே நம்மை உயிரோட்டமுள்ள ஆரோக்கியமான மனிதர்களாக வைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்பாடு?

பயன்பாடு?

உடம்பில் உள்ள இரத்த நாளங்கள் பழுதடைந்தால், இந்த பிளேட்லெட்கள் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்து இரத்தம் கசிவதை தடுக்கிறது. அதே போல் உடம்புக்கு வெளியே வெட்டுக் காயங்கள் அல்லது சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தம் கொட்டுவதை தடுத்து அதை உறைய வைக்கவும் செய்கிறது. பிளேட்லெட்கள் எனும் இந்த குருதிச்சிறுதட்டுகள் இடத்தை பொறுத்து வேவ்வேறு வகையில் நமக்கு பயன்படுகிறது.

இயல்பான பிளேட்லெட் எண்ணிக்கை என்ன?

இயல்பான பிளேட்லெட் எண்ணிக்கை என்ன?

சராசரியாக நல்ல தேக ஆரோக்கியமுள்ள உடம்பில் ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் சுமார் 1,50,000 முதல் 4,50,000 பிளேட்லெட்கள் இருக்கும். ஒரு மனிதனுக்கு 1,50,000 க்கும் குறைவாக பிளேட்லெட்கள் குறையும் போது அதை த்ரோம்போ சைட்டோபெனியா (thrombocytopenia) என்று அழைக்கிறார்கள். அதுவே அதிகபட்ச அளவான 4,50,000 பிளெட்லெட் எண்ணிக்கை என்றால் அதை த்ரோம்போ சைட்டோசிஸ் (thrombocytosis) என்று அழைக்கிறார்கள். இரத்த பரிசோதனை மூலம் நாம் இதை அறிந்து கொள்ள முடியும்.

குறைய காரணம்?

குறைய காரணம்?

பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைவதற்கு கீழ்காணும் மூன்றும் முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

1. எலும்பு மஜ்ஜையில் போதிய அளவு பிளேட்லெட்கள் உற்பத்தியாகவில்லை.

2. நோயாளிகளின் இரத்த ஓட்டத்தில் பிளேட்லெட்கள் சேதமடைதல்.

3. மண்ணீரல் அல்லது கல்லீரலில் பிளேட்லெட்கள் சேதமடைதல்.

சேதமடைய காரணம்?

சேதமடைய காரணம்?

• நாம் உட்கொள்ளும் சில ஒவ்வாத மருந்துகள்

• இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

• லிக்கோமியா அல்லது லிப்போமா போன்ற புற்றுநோய்கள்

• புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை

• சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் தொற்று பிரச்சனைகள்

• மிதமான மது அருந்தும் பழக்கம்

குறைவதற்கான அறிகுறிகள்?

குறைவதற்கான அறிகுறிகள்?

பல் ஈரல், மூக்கு, இரைப்பை குடல் ஆகிய இடங்களிலிருந்து அடிக்கடி இரத்தக் கசிவு ஏற்பட்டால் உடனே தாமதிக்காமல் பிளேட்லெட் எண்ணிக்கை சம்பந்தபட்ட இரத்த பரிசோதனையை செய்து கொள்வது அவசியம். அதாவது சராசரியாக 1,50,000 க்கு குறைவாக பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே இந்த அறிகுறிகள் தோன்றும். அதுவே 50,000 க்குள் கீழே குறைந்தால் அன்றாட வாழ்க்கையில் உடம்பில் காரணமே இல்லாமல் இரத்த கசிவுகள் ஏற்படும். எனவே குறிப்பறிந்து உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொள்வது மிக அவசியம்.

சிகிச்சைகள்?

சிகிச்சைகள்?

சராசரி குறைந்த பிளேட்லெட்களின் அளவான 1,50,000 க்கும் கிழே எண்ணிக்கை குறையும் போது தான் முன்னர் சொன்ன த்ரோம்போ சைட்டோபினியா ஏற்பட்டு சிகிச்சைகள் அவசியம் ஆகிறது.

பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைவதற்கான அடிப்படை காரணிகளை கருத்தில் கொண்டு,

• இரத்த அல்லது பிளேட்லெட்களை மாற்றுதல்

• பிளேட்லெட்களின் எண்ணிக்கையை கூட்டும் மருந்துகள். சில நேரம் கார்டிக்கோ ஸ்டிராய்ட் (corticosteroid) அல்லது அதை விட அதி தீவிர மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும். நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மையை பொறுத்து சிகிச்சைகள் மாறுபடும்.

• மண்ணீரலில் ப்ளேலேட்கள் சேதமடைந்து வேறு சிகிச்சைகள் சரிவராத நிலையில் ஸ்பெளெக்னோடமி (splenectomy) என்னும் மண்ணீரல் அறுவை சிகிச்சை.

• இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் நிற அல்லது திரவ பிளாஸ்மாக்களை மாற்றும் அவசர மருத்துவ சிகிக்சைகள்.

இயற்கையாக கூட்டுவது எப்படி?

இயற்கையாக கூட்டுவது எப்படி?

இரண்டே வழிகள் தான். நாம் உண்ணும் உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் மட்டுமே நம் உடம்பில் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை கூட்ட முடியும்.

பப்பாளி இலை சாறு

பப்பாளி இலை சாறு

பப்பாளிப்பழ இலைச்சாறு பிளேட்களின் எண்ணிக்கையை கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பண்டைய ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் அதை உறுதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2013 ம் ஆண்டு இலங்கையில் எலிகளுக்கு இந்த புதிய காரிகா பப்பாளி இலைச் சாறுகளை சிகிச்சையாக செலுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டப்பட்டது. அதில் எதிர்பார்த்ததை விட அதிகமாக பிளேட்லெட்கள் மற்றும் ஆர்பிசி எனும் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை கூடியதை கண்டறிந்தார்கள்.

அதே ஆண்டில் தான் மலேசியாவில் பிளேட்லெட்கள் குறைந்து டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கரிகா பப்பாளி பழச்சாற்றை கொடுத்து பிளேட்லெட்களின் எண்ணிக்கை கூட்டி குணப்படுத்தினார்கள்.

எப்படி தயாரிப்பது?

தேவை • 2 அல்லது 3 பப்பாளி இலைகள் • 1 முதல் 2 டீஸ்பூன் தேன்

பப்பாளி இலைகளை நன்றாக நீரில் அலசி கொள்ளுங்கள்.

இலைகளை மூலிகை இலைகளை அரைப்பது சின்ன உரல் அல்லது அம்மி கல்லில் அரைத்து பசை போல் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த பப்பாளி இலை பசையை ஒரு துணியில் முடித்து அதை பிழிந்து சாறை வடிகட்டி கொள்ளுங்கள்.

அப்படி கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட மகத்தான பப்பாளி பழச்சாறை தினமும் இரண்டு முறை உட்கொள்ளுங்கள். பப்பாளி இலை மிகவும் கசப்புதன்மையோடு குடிக்க முடியாமல் இருந்தால் தேவையான அளவு தேனை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் கசப்பே மருந்து என்பதையும் மறந்து விட வேண்டாம்.

அமிழ்தவள்ளி மூலிகை சாறு

அமிழ்தவள்ளி மூலிகை சாறு

ஆயுர்வேதம் அமிழ்தவள்ளி (Tinospora Cordifolia) என்கிற அமிர்த மூலிகையும் (Giloy herb) பிளேட்களின் எண்ணிக்கை கூட்டும் வல்லமை பெற்றவை என்று கூறுகிறது. இந்த மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதோடு ஒவ்வாமை போன்ற பிணிகளில் இருந்து பெரிய நிவாரணத்தை தருகிறது. இந்த மூலிகையின் வேரில் இருந்து தான் சாறைப் பிழிந்து பருக வேண்டும். இரத்தத்தில் உள்ள மேக்ரோஃபேஜஸை வலிமையாக்கி வெளியில் இருந்து தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளை தடுக்கிறது.

அமிழ்தவள்ளி வேரிலிருந்து சாறை தயாரிப்பது எப்படி?

• சுமார் 4 செ.மீ நீளமுள்ள 4 முதல் 5 அமிழ்தவள்ளி வேர்கள்

• 4 முதல் 5 துளசி இலைகள்

• 2 முதல் 3 டம்பளர் தண்ணீர்

இரவில் அமிழ்வள்ளி வேரை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரோடு துளசி இலைகளை கிள்ளி போட்டு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் விட்டு அந்த மூலிகை நீரை கொதிக்க விடவேண்டும். மூலிகை வேர் நீர் பதியாக வற்றும் வரை கொதிக்க விடவேண்டும். பிறகு அந்த வேர் நீரை குளிர வைத்து நாளைக்கு 2 அல்லது 3 முறை அருந்த வேண்டும். பிளேட்லெட்கள் எண்ணிக்கையை கூட்டும் கோதுமைப்புல்?

கோதுமைப்புல்லில் குளோரோஃபில், மெக்னீசியம், செலினியம், ஜிங்க், குரோமியம் மேலும் பீட்டா கரோடீன் என்கிற ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் இ, சி, பி12 தவிர இரும்பு சத்து, ஃபாலிக் அமிலம் மற்றும் பைரிடாக்ஸின் ஆகியவை மிகுதியாக நிறைந்துள்ளன.

கோதுமைப்புல் சாறு

கோதுமைப்புல் சாறு

பிளேட்லெட்களின் எண்ணிக்கையை கூட்டக்கூடிய தாதுக்கள், அமினோ அமிலம், நொதிகள் (enzymes) ஆகியவையும் கோதுமைப்புல்லில் அடங்கி உள்ளன. மேலும் இத்தகைய சத்தான மருத்துவ மகிமை மிக்க கோதுமைப்புல் இரத்த சோகையை போக்கும் வல்லமை மிக்கதாகவும் அறியப்படுகிறது. அதனால் கோதுமைப்புல் ஆற்றல் மிக்க ஆபூர்வ மூலிகையாக போற்றி பாதுகாக்கப்படுகிறது.

2011 ல் யுனிவர்சல் ஃபார்மஸி ஆஃப் லைப் சயின்ஸ் எனும் சர்வேச ஜர்னிலில் இந்த பிளேட்லெட்களின் எண்ணிக்கையை கூட்டக்கூடிய கோதுமைப்புலின் மகத்துவம் பற்றிய மருத்துவ குறிப்புகள் பதிவாகி உள்ளது.

கோதுமைப்புல்லை தயாரிப்பது எப்படி?

அரை கப் அளவுக்கு கோதுமைப்புல்லை அரைத்து பசையாக்கி கொள்ளுங்கள். பின்பு அதில் தேவையான அளவு தண்ணீரை கலந்து சாறு போல் பருக வேண்டும். தினமும் 2 அல்லது 3 முறை கோதுமைப்புல் சாற்றை பருகி வரலாம்.

கற்றாழை சாறு

கற்றாழை சாறு

கற்றாழையின் மகத்துவத்தை விளக்க தேவையில்லை. 200க்கும் மேற்பட்ட மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை தான் கற்றாழை. மிகச் சிறந்த கிருமி நாசினி, நோய் எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்திகளை கொண்ட வல்லமை மிக்கது கற்றாழை. கற்றாழை செடியை கத்தி மூலம் சீவி அந்த பிசினில் ஒரு டம்ளர் நீரை கலந்து சாறாக்கி தினமும் 2 அல்லது 3 மூறை பருகி வந்தால் பிளேட்களின் எண்ணிக்கையை கூட்டலாம்.

மூன்று மூலிகையும் கலந்த சாறு சிகிச்சை?

மூன்று மூலிகையும் கலந்த சாறு சிகிச்சை?

மேலே சொன்ன பப்பாளி இலைச் சாறு, கோதுமைப்புல், கற்றாழை ஆகிய மூன்றையும் தண்ணீரில் நன்றாக அலசி விட்டு, தனித்தனி சாறாக்கி அவற்றை ஒரே சாறாக கலந்து கூட தினமும் பருகி வரலாம். சாற்றின் கசப்புத் தன்மையை நீக்க கூடுதலாக தேனையும், எலுமிச்சை சாற்ரையும் கூட சேர்த்து கொள்ளலாம். இந்த வகை பலவகைச் சாறும் பிளேட்லெட்களின் எண்ணிக்கை பெருக ஒரே நேரத்தில் சிறந்த மருத்துவ மூலிகை சிகிச்சையாக அமையும்.

பிளேட்லெட்களை அதிகரிக்கும் உணவுகள்

பிளேட்லெட்களை அதிகரிக்கும் உணவுகள்

நாம் உண்ணும் உணவு மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க வல்லதாக இருக்க வேண்டும். உதாரணமாக வைட்டமின் கே சத்துமிக்க பச்சை காய்கறிகள், கீரை வகைகளை உடலில் அன்றாடம் அவசியமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை உடலுக்கு ஆரோக்கியத்தோடு பிளேட்களின் எண்ணிக்கையை இயல்பாகவே அதிகரிக்க உதவும்.

மேலும் காலிஃப்ளவர், ஆலீவ், சோயாபீன், முட்டை ஆகியவையும் உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின் பி9 சத்து மிக்க ஆரஞ்சு, பசலைக் கீரை, தானியங்களை தவறாமல் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.

மேலும் ஒமேகா 3 கொழுப்பு அமில சக்தி கொண்ட மீன், கடற்பாசி, பருப்பு வகைகள், ஆளிவிதை, நாவல் பழம், சீனிக்கிழங்கு, கொய்யாப்பழம், க்ரீன் டீ, பீட்ரூட் சாறு, பூசணிக்காய், ஆகியவகைகளும் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதோடு, பிளேட்களின் எண்ணிக்கையை கூட்ட வல்லவை ஆகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

கசப்பு தன்மை கொண்ட ஜின் போன்ற மது வகைகள், கசப்பான எலுமிச்சை, டயட் சோடா, குளிர் பானங்கள், சர்க்கரை இல்லாத கொழுப்பு மிக்க சாக்லெட் மற்றும் கேக் வகைகள், பீர், வொயின், ஆல்கஹால் அதிகம் கொண்ட மதுபானங்கள், அதிகப்படியான காபி, டீ வகை பானங்கள் ஆகியவற்றை தவிர்ப்பதே மிகவும் நல்லது.

குயினைன், ஆஸ்பட்டேம் பாதிப்புகள்?

குயினைன், ஆஸ்பட்டேம் பாதிப்புகள்?

சின்சோண மரப்பட்டைகளில் இருந்து எடுக்கப்படும் குயினைன் பொடியை (Quinine) சேர்த்து தயாரிக்கப்படும் பானங்கள் உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவை மலேரியா நோய்க்கான சிகிச்சைக்கும் பெரிதும் பயன்பட்டாலும், பிளேட்லெட்களின் எண்ணிக்கையை குறைக்கும் தன்னை கொண்டதால் குயினைன் பொடி கலந்த உணவு வகைகளை தவிர்த்தல் அவசியம்.

தற்போது மார்கெட்டில் சுகர் ஃப்ரீ (sugar free food products) உணவுகள் மிகவும் பிரபலமாக விற்பனை ஆகி வருகிறது. அதில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்கிற லோ கலோரி சுவையூட்டி (low-calorie sweetener) சேர்க்கப்படுகிறது. இது நம் உடலில் பிளேட்லெட்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அது புற்று நோயையும் உருவாக்க கூடும்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்?

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்?

பதப்படுத்தபட்ட கோதுமை, ரவை, பார்லி, மைதா, ஓட்ஸ் வகை உணவுகள், பேக்கரி பொருட்கள் குலுட்டன் (gluten) நிறைந்த உணவுப் பொருட்கள் நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க வைப்பதோடு, நமது உடலில் ப்ளேட்லெட்களிண் எண்ணிக்கையை குறைத்து மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ண கூடியவை.

மேலே நாம் சேர்க்க வேண்டிய தவிர்க்க வேண்டிய உணவு வகைகளைப் பற்றி அறிந்து கொண்டாலும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுங்குபடுத்தபட்ட வாழ்க்கை முறையால் மட்டுமே ப்ளேடலெட்கள் எண்ணிக்கை குறைவு மற்றும் மிகுதியால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்து எந்தவகை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நம்மால் மீட்டெடுக்க முடியும்.

இப்பவும் கிராமவாசிகள் யதார்த்தமாக சொல்வார்கள். பசித்து சாப்பிடுறேன். படுத்தா தூங்கிடுறேன் என்று. அது சாதாரண வார்த்தை அல்ல. சிறப்பு மிக்க வாழ்க்கை முறை. மனித மனமும், உடலும் நம் கட்டுக்குள் இல்லாமல் பல்வேறு புறக்காரணிகளால் அலைபாய்ந்த படி அன்றாட வாழ்க்கையை ஒழுங்கப்படுத்த முடியாமல் அல்லல் படுகிறோம்.

மன அமைதி

மன அமைதி

உடம்பு நரம்பு, சதை இரத்தம் போன்றவற்றால் உருவான மிஷினைப் போன்றது தான். அதற்கு தேவையான ஊட்டச்சத்தும், ஆரோக்கியமான உறைவிடம், தண்ணீர், காற்று, சுகாதாரமான சுற்றுபுறச்சூழல், அவசியமான ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சிகள் ஆகியவை மிகவும் அவசியம். நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை பற்றி நாம் கவலைபட தேவையையில்லை. நம் ஆரோக்கிய வாழ்க்கை முறையும், உணவு பழக்கமுமே ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை சரிபார்த்து, சரிசெய்து கொள்ளும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். நல்ல தூய்மையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் அது நம்மை உள்ளம், உடலை சுத்திகரிப்பதோடு சுகாதாரமான சுற்றுச்சூழலுக்கும், வாழ்க்கை முறைக்கும் நம்மை பழக்கி விடும். அதுவே நமக்கும் நமது ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளுக்கும் அவசியமான ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Increase A Low Platelet Count

Platelets are the blood cells that help your blood to clot. When your platelet count is low, you may notice symptoms, including fatigue, easy bruising, and bleeding gums.
Desktop Bottom Promotion