Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்!
கரும்புள்ளிகள் ஒருவகை பருக்கள் ஆகும். சருமத்துளைகள் அடைப்பு மற்றும் அதிகரித்த எண்ணெய் சுரப்பு போன்றவற்றின் காரணமாக கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.
கரும்புள்ளிகள் என்பது கருப்பு எண்ணெய் கட்டிகள் ஆகும். இது சருமத்தின் ஆழத்தில் சென்று முகத்தில் கருப்பு திட்டுகளாக மாறுகின்றன. இவை, ஒருவகை பருக்கள் ஆகும். சருமத்துளைகள் அடைப்பு மற்றும் அதிகரித்த எண்ணெய் சுரப்பு போன்றவற்றின் காரணமாக கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. கரும்புள்ளிகளை புறக்கணிப்பதால் என்னவாகிறது என்றால் பருக்கள் தோன்றுகின்றன.

கரும்புள்ளிகள் தோன்றுவதற்கான அறிகுறிகள்:
* கருமையான திட்டுகள்
* அதிகரித்த அளவு சரும துளை
* முகத்தில் தாடை, மூக்கு மற்றும் கன்னம் போன்ற பகுதிகளைச் சுற்றி கருப்பு நிற கட்டிகள் அல்லது கொப்பளங்கள் தோன்றுவது.

கரும்புள்ளிகள் தோன்றுவதற்கான காரணங்கள்:
எண்ணெய் பசை சருமம் அல்லது கலவையான சருமம்:
இந்த வகை சருமத்தில் துளைகள் எளிதில் அடைக்கப்படுகின்றன. இதனால் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.
சருமத்துளைகள் அடைப்பு:
மோசமான சரும பராமரிப்பு அல்லது ஒழுங்கற்ற முறையில் சருமத்தை சுத்தம் செய்வது போன்றவற்றின் காரணமாக சருமத்தில் எண்ணெய் சேகரிக்கப்பட்டு அதன் காரணமாக துளைகள் அடைக்கப்படுகின்றன.
மோசமான சரும பராமரிப்பு:
எண்ணெய் சார்ந்த பொருட்கள் அல்லது க்ரீம்களை அதிக அளவு பயன்படுத்துவதால் சருமத்துளைகள் அடைக்கப்பட்டு கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.
ஹார்மோன் மாற்றங்கள்:
ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக எண்ணெய் சுரப்பிகள் அதிக சீபம் உற்பத்தி செய்வதால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. மேலும் மன அழுத்தம் காரணமாகவும் இந்த நிலை உண்டாகலாம்.

கரும்புள்ளிகள் தொடர்பான ஆபத்து காரணிகள்:
* வறண்ட சருமம் உள்ளவர்களை விட எண்ணெய் சருமம் உள்ளவர்களை கரும்புள்ளிகள் அதிகம் தாக்குகிறது.
* குறிப்பாக பதின்பருவத்தில் உள்ளவர்கள், பூப்பெய்தவர்கள் போன்றவர்கள் ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுவதால் அவர்களுக்கு கரும்புள்ளிகள் தோன்றுவது ஒரு பொதுவான காரியம்.
* தவறான சரும பராமரிப்பு வழக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு கரும்புள்ளிகள் தோன்றலாம். குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எண்ணெய் பசையுள்ள கிரீம்கள் பயன்படுத்துவதால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்ற வழிவகுக்கிறது.
* சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வதால், இறந்த சரும அணுக்கள் மற்றும் அதிக எண்ணெய் கட்டுப்படுத்தப்படுகிறது.

கரும்புள்ளிகளுக்கான சிகிச்சை:
* கரும்புள்ளிகள் உள்ளவர்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் எக்ஸ்போலியேட் செய்வதை கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.
* எக்ஸ்போலியேட் செய்வதற்கான க்ரீம் மற்றும் ஜெல் உபயோகிக்க பாதுகாப்பானவை மற்றும் இவை மருத்துவ பரிந்துரை இல்லாமலும் கடைகளில் வழங்கப்படுகிறது. ஆனால் அதிகமான பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.
* கரும்புள்ளிகளை நீக்குவதற்கான பட்டையில் க்ளு சேர்த்து அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிது நேரம் வைத்துவிட்டு சற்று நேரம் கழித்து அதனை எடுத்து விடுவதால் அவற்றுடன் சேர்த்து கரும்புள்ளிகளும் வந்துவிடும்.
* கரும்புள்ளிகளை நீங்கள் தானாகவே நீக்குவதை தவிர்க்க வேண்டும். அதற்கான சுகாதார நிபுணர்கள் மூலம் அவற்றை நீக்கலாம். இதனால் தழும்புகள் தோன்றுவது தவிர்க்கப்படும்.
* தோல் மருத்துவர்கள் ட்ரிடினோயின் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். இவை இறந்த சரும அணுக்களை வெளியேற்றுகிறது. இருந்தாலும் இவற்றில் சில பக்க விளைவுகள் உள்ளன.
* ஸ்கின் பில் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்த தொடங்கிய ஆரம்ப நாட்களில் சருமம் சுத்தமாக தோன்றாவிட்டாலும் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். சருமமும் தூய்மையாக இருக்கும்.

கரும்புள்ளிகளை போக்குவதற்கான வீட்டு தீர்வுகள்:
முகத்திற்கு மென்மையாக ஸ்கரப் செய்து பிறகு மென்மையாக மசாஜ் செய்வதால் கரும்புள்ளிகள் நீக்கப்படலாம். இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், தேன், ஒரு சிட்டிகை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தேய்க்கலாம்.
மூலிகைகள் மூலம் உங்கள் சரும அழகை மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் லாவண்டர், எலுமிச்சை தோல் , புதினா இலை ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து அதனை முகத்தில் தடவலாம். இதனால் சருமத்தின் எண்ணெய்த் தன்மை மற்றும் கரும்புள்ளிகள் கட்டுப்படுத்தப்படும்.

கரும்புள்ளிகளை தடுப்பது எப்படி?
வழக்கமான சரும பராமரிப்பு மற்றும் சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்றவற்றை பின்பற்றுவதால் கரும்புள்ளிகள் தடுக்கப்படும். ஸ்க்ரப்பிங் ஜெல் மற்றும் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வது போன்றவை சிறந்த முறையில் கரும்புள்ளிகளை போக்குவதற்கான வழிகளாகும்.



Click it and Unblock the Notifications











