Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் உபயோகித்தால் உண்டாகும் பிரச்சனைகள் பற்றி இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெயே அழுக்குகளையும் இறந்த செல்களையும் சரும துவாரங்கள் வழியாக வெளியேற்றும். வெளித் தோல் பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அவை குளிக்கும்போது லேசாக சோப்பை போட்டாலே போய்விடும்.
ஆனால் சோப்பை நுரைவரும் அளவிற்கு போட்டால்தான் சிலருக்கு திருப்தியே உண்டாகும். அப்படி செய்தால் இயற்கை எண்ணெய்யை முழுவதும் அகற்றுவதோடு, அழுக்குகளும் சேர்ந்து சரும அலர்ஜியை உண்டாக்கும்.
விஷயம் இப்படியிருக்க, இதில் ஒரே ஒரு சோப்பை குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களும் உபயோகிப்பார்கள். இது நல்லதா என சரும மருத்துவர் கூறுகிறார் தொடர்ந்து படியுங்கள்.

தொற்று :
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்திவிடும்.
ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது. அதேபோல் வியர்வையால் உண்டாகும் கிருமிகளும் மற்றவர்களும் தொற்றும் வாய்ப்புண்டு.

சரும வகை :
ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான சருமம் அமைந்திருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

சோப்பின் அமில சம நிலை :
சிலருக்கு என்ணெய் சருமமாக இருக்கும். இன்னும் சிலருகு வறண்ட சருமமாக இருக்கும். எது எப்படியோ எல்லாரும் பொதுவாக பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

எண்ணெய் சருமம் :
கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்யேக சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

வறண்ட சருமம் :
வறண்ட சருமம் இருப்பாவ்ரகள் க்ரீம் நிறைந்த சோப் உபயோகிப்பதால் சருமம் வறட்சி, சுருக்கம், அலர்ஜி போன்றவற்றிலிருந்து தப்பிக்கும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











