Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
முகப்பருக்களை விரட்டும் தக்காளியின் மகிமை!
செக்கச் செவேல் என்று இருக்கும் தக்காளிக்கு நிறம் கொடுப்பது லைகோபீன் என்ற நிறமிதான். இந்த நிறமி ஒரு முழுமையான ஆன்டி ஆக்ஸிடென்ட் கூட.
தக்காளியில் நிறைய விட்டமின்கள், மினரல்கள் உள்ளது. தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு செல்களை அழிக்கும்.
தக்காளியின் அதே குணம் முகத்திற்கு அழகையும் சேர்க்கிறது. முகத்தில் இருக்கு சுருக்கங்களைப் போக்கும். நிறத்தினை கூட்டும். முகப்பருக்களை விரட்டும் என தக்காளியின் குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது தக்காளி ஃபேஸ் பேக் உபயோகித்து, முகப்பருக்களை எப்படி போக்கச் செய்யலாம் என்று பார்ப்போம்.
தக்காளியில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி சருமத்திற்கு ஊட்டம் அளிக்கும். அதிகப்படியான எண்ணெயை நீக்கும். ஆழ்ந்து ஊடுருவி, சருமத் துளைகளில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றும்.
தக்காளி பேக் :
முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வழிந்தால், வெறும் தக்காளியின் சதைபகுதியை எடுத்து, நன்றாக மசியுங்கள். பின் அதனுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேயுங்கள். 10 நிமிடங்கள் கழித்து பார்த்தால், உங்கள் முகம் பெற்றிருக்கும் மேஜிக் பார்த்து நீங்களே வியந்து போவீர்கள்.
தக்காளி அவகாடோ மாஸ்க் :
அவகாடோவில் ஆன்டி செப்டிக் குணங்கள் உள்ளது. இந்த இரண்டும் கலந்து முகத்திற்கு பளபளப்பையும், முகப்பரு இல்லாத தூய்மையான சருமத்தையும் தரும்.
அவகாடோ மற்றும் தக்காளியின் சதைபகுதியை எடுத்து, நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இவற்றை முகத்தில் தேய்த்து காய விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். முகப்பருக்கள் நீங்க இது அருமையான பலனை தரும்.
தக்காளி யோகார்ட் கலவை :
தக்காளி சதைப் பகுதியுடன் சிறிது யோகார்ட் கலந்து முகத்தில் தேய்க்கவும். காய்ந்ததும் கழுவலாம். இது முகப்பருக்களுக்கு மட்டுமல்ல, சரும எரிச்சல், அலர்ஜி ஆகியவௌகளுக்கும் நல்ல நிவாரணம் தரும்.
உங்களுக்கு நேரம் மிகக் குறைவாக இருந்தால், மிக எளிதான இந்த முறையை பின்பற்றுங்கள். தக்காளியை வட்ட வடிவமாக அறிந்து, முகத்தில் வட்ட வடிவில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவலாம். இது முகப்பருக்களை விரட்ட சிறந்த எளிமையான வழி.
வறண்ட சருமம் உள்ளவர்கள் வெறும் தக்காளியை பயன்படுத்தக் கூடாது. இன்னும் வறட்சியை கொடுத்துவிடும். சுருக்கங்களும் ஏற்படும். தக்காளியுடன் தேன் சேர்த்துக் கொண்டால் அற்புதமான டோனராக வறண்ட சருமத்திற்கு பயன்படும்.



Click it and Unblock the Notifications




