Latest Updates
-
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
இமைகளை அடர்த்தியாக வளரச் செய்யும் எண்ணெய் !!
சிறிய கண்களுக்கு கச்சிதமா அழகு சேர்க்கும் பெரிய இமைகள். நிறைய பேருக்கு கண்கள் பெரியதாக இருக்கும். ஆனால் இமைகள் போதிய வளர்ச்சி இருக்காது. இது ஒரு குறையாக தெரியும். இமைகள் நீண்டு அழகாக வளர ஒரு அழகு குறிப்பு உங்களுக்காக இங்கே காத்திருக்கிறது.

செயற்கை இமைகள் கண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. கண்களில் இருக்கும் சருமம் மிகவும் மென்மையானது. இந்த செயற்கை இமைகள் அலர்ஜி, அரிப்பு, தடிப்பை ஏற்படுத்தும்.
அதே போல், அடர்த்தியாக தெரிய வேண்டுமென்பதற்காக மஸ்காரா சிலர் போடுவார்கள். அதுவும் தினம் உகந்தது அல்ல. இயற்கையாக இமைகளுக்கு போஷாக்கு அளித்திடுங்கள் எண்ணெயின் மூலம்.
இங்கே கொடுத்திருக்கும் எண்ணெய் கண்களின் முடியின் வேர்க்கால்களை தூண்டி, நீண்டு வளரச் செய்யும். எப்படி அதனை செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை ;
விளக்கெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
ஈமு எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - அரை டீ ஸ்பூன்
விட்டமின் ஈ எண்ணெய் - 2 கேப்ஸ்யூல்
இந்த எண்ணெய்கள் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்தவை. எந்த தீங்கும் விளைவிக்காதவை. விளக்கெண்ணெய் அடர்த்தியாக இமைகளை வளர்ச் செய்யும்.
ஈமு எண்ணெய் இமைகளுக்கு பலமும் போஷாக்கும் தரும். தேங்காய் எண்ணெய் மற்றும், விட்டமின் ஈ ஈரப்பததை அளித்து, கண்களை மென்மையாக்கும்.
செய்முறை :
மேற்கூறிய எல்லா எண்ணெய்களையும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வருடம் வரை வைத்து உபயோகிக்கலாம். தினமும் தூங்குவதற்கு முன் இந்த எண்ணெயை கண் இமை மற்றும் புருவத்திலும் தடவி இதமாக மசாஜ் செய்யவும். ஒரு மாதத்திலேயே வித்யாசம் காண்பீர்கள்.



Click it and Unblock the Notifications


