Just In
- 4 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 8 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 9 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
20 நிமிடங்களில் கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி?
நம் உடலின் சில பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கும். அப்படி கருமையாகும் பகுதிகளில் ஒன்று தான் கழுத்து. இந்த கழுத்தைச் சுற்றி கருப்பு நிற படலம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் நீண்ட நேரம் அவ்விடத்தில் சூரியக்கதிர்கள் பட்டால், மோசமான சுகாதாரம், நீரிழிவு போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் இப்படி கழுத்தில் உள்ள கருமையை எளிமையான மூன்று செயல்களின் மூலம் உடனே போக்கலாம். குறிப்பாக இந்த மூன்று செயல்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் 20 நிமிடங்கள் தான். இந்த 20 நிமிடங்களிலேயே கழுத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். இப்போது அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போம்...
செயல் #1
கழுத்தில் உள்ள கருமையைப் போக்க முதலில் செய்ய வேண்டியது, சுடுநீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து, அதனை கழுத்தில் 2-3 நிமிடம் வைக்கவும். இப்படி செய்வதால் கழுத்தில் உள்ள சருமத்துளைகள் திறக்கப்பட்டு, அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.
செயல் #2
அடுத்ததாக ஸ்கரப் செய்ய வேண்டும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் உப்புடன், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா அல்லது பேக்கிங் உப்பு சேர்த்து, பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அந்த கலவையை கழுத்தில் தடவி, பஞ்சு கொண்டு 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் பேக்கிங் சோடா மற்றும் உப்பு கழுத்தில் உள்ள கருமையைப் போக்கும் மற்றும் ஆலிவ் ஆயில் நல்ல மாய்ஸ்சுரைசராக செயல்படும்.
செயல் #3
மூன்றாவதாக கருமையைப் போக்கும் மாஸ்க் போட வேண்டும். அதற்கு சந்தனப் பொடியுடன், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, பின் பால் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
இந்த மூன்று செயல்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கழுத்தில் உள்ள கருமை மறைந்திருப்பதை நன்கு காணலாம்.