Latest Updates
-
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
சரும பிரச்சனைகளை தடுக்கும் பாதாம் எண்ணெய்!!
பாதாம் எண்ணெய் மிகவும் மென்மையான சென்ஸிடிவான சருமத்திற்கு ஏற்றது. அதிலுள்ள சத்துக்கள் சருமத்தை மின்னச் செய்யும். சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மற்றும் வறட்சி ஆகியவற்றை போக்கி சருமத்தை மிருதுவாக்குகிறது. இதனைக் கொண்டு எப்படி உங்களை அழகு படுத்தலாம் என பார்க்கலாம்.

பாதாம் மற்றும் தேன் :
இது சருமத்தை கண்ணாடி போன்று மினிமினுக்க வைக்கும் தேன் மற்றும் பாதாமை சம அளவு எடுத்து கழுத்து, முகம் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இப்படி செய்தால் சருமம் பளபளக்கும்.
பாதாம் மற்றும் பால் :
உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை களைந்து நிறத்தை அதிகரிக்கும். பாதாம் என்ணெய் 1 ஸ்பூன் எடுத்து அதில் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் விட்டு கலக்கி முகத்தில் தடவுங்கள் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். முகம் பளிச்சென்று இருக்கும்.
பாதாம் எண்ணெய் மற்றும் விட்டமின் ஈ :
உங்கள் முகத்தில் சுருக்கங்கள் சற்றே காட்டமாக இருக்கிறதா? இது சிறந்த வழியாக இருக்கும். பாதாம் எண்ணெயை சில துளி எடுத்து இரண்டு டீ ஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெயை எடுத்து கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் குறிப்பாக கண்களுக்கு அடியில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு :
இந்த குறிப்பு முகப்பரு, எண்ணெய் சருமம் மற்றும் கரும்புள்ளிகளுக்கு நல்ல பலனைத் தரும். இரண்டையும் சம அளவு எடுத்து கலக்கி முகத்தில் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.



Click it and Unblock the Notifications



