தக்காளி ஃபேஸ் மாஸ்க் பொலிவான சருமத்தை தரும்!!!

By Maha

தக்காளி ஒரு சிறந்த உணவுப் பொருள் மட்டுமல்லாது, அழகு சாதனப் பொருளும் கூட. இத்தகைய தக்காளி சருமத்திற்கு ஒரு நல்ல நிறத்தை தருவதோடு, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், பழுதடைந்த வரும செல்களை சரிசெய்யும் மற்றும் சருமத்திற்கு ஈரப்பசையைத் தரும். ஆகவே அத்தகைய தக்காளியை, முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போமா!!!

Tomato Juice Mask
தக்காளியை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்யும் முன் அதனை ஃப்ரீசரில் 15 நிமிடம் வைக்க வேண்டும். பின் அதனை எடுத்து, பாதியாக வெட்டி, முகத்தில் வைத்து வட்டமாக சுழற்ற வேண்டும். அதனால் முகத்தில் தக்காளி சாறானது முற்றிலும் பரவும். மேலும் தக்காளியில் அதிகமான அளவில் லைகோபைன் என்னும் பொருளும், வைட்டமின் ஏ-யும் அதிகமாக உள்ளது. இதனால் முகம் எப்போதும் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும்.

Story first published: Wednesday, August 29, 2012, 13:07 [IST]
Desktop Bottom Promotion