Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
புன்னகைக் கோடுகளை மறைக்க சிகிச்சை இருக்கு!

பெரும்பாலும் 40-80 வயதிற்கிடையில் மனிதர்கள் இயற்கையான hyaluronic அமிலத்தினை இழக்கின்றனராம். முதலில் கொழுப்பை இழக்கும் இடமாகக் கண்கள்தான் உள்ளன. இதனுடன், சிரிக்கும்போது ஏற்படும் கோடுகளும் தொடர்புபட்டுள்ளன. இதனாலும் இச்சுருக்கங்கள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிரிப்புகளின் மூலம் ஏற்படும் சுருக்கத்தினை போக்க Botox என்ற மருந்து தசைநார்களை மரத்துப்போகச் செய்துவிடும். ஊசிகள் முகத்தினை ஓர் உறைந்த நிலைக்கு மாற்றிவிடும். இதற்கு மாறாக hyaluronic அமிலத்தினால் உருவாக்கப்பட்ட நிரப்பிகளை உட்செலுத்தினால் அது தோலை உப்ப வைத்துக்கொண்டிருக்கும். இதன் விலையும் Botox மருந்தின் விலையும் ஒன்றுதானாம். 300 பவுன்ட்கள் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு சிகிச்சை முறை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் ஹரோட்ஸ்சில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த WrinkleMD என்ற வலியற்ற ஊசியற்ற கருவியானது 130 பவுண்ட்களே பெறுமதியானதாகும். இது hyaluronic அமிலங்கொண்ட மூலக்கூறுகளைப் புதிய தொழிநுட்ப முறையினால் தோலுக்குள் ஆழமாகச் செலுத்துகின்றது.
இதனை 35-65 இற்குமிடைப்பட்ட பெண்கள் ஒரு மாதமாகப் பயன்படுத்தினார் என்றும் வலியற்றதாக இருந்ததாகவும் தோலியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். வாரந்தோறும் இந்த சிலிக்கன் அமைப்புச் சரிபார்க்கப்பட்டதாகவும் இவ்வாறு 4 வாரங்கள் முடிந்தபின்னர் அதை எடுத்தபோது அவர்களது 41.7வீதச் சுருக்கம் குறைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஊசியின் வலிகளின்றி அமிலத்தினைத் தோலிற்குள் செலுத்துவதானது தோலிற்கும் நல்லதாகும். கிருமித்தொற்றினையும் இது இல்லாமற்செய்கின்றது என்கின்றனர் நிபுணர்கள்.
இதனைப் பலதரப்பட்ட பெண்களில் செய்தபோதும் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு மாதிரியான விளைவுகள் கிடைத்திருந்தன. எனினும் இவை எவ்வளவு காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்குமென்பதும் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முகத்தின் இளமையை தக்கவைக்க இந்த சிகிச்சை முறையினை 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தயங்காமல் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.



Click it and Unblock the Notifications