Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
அட்டகாசமா ஷேவ் பண்ணி, பெண்களை எப்படி அசத்தலாம்!!

முகத்தில் தாடியின் அளவை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். தாடியானது குறைவாக இருந்தால், அவற்றை எளிதில் ட்ரிம் அல்லது ஷேவ் செய்யலாம். ஆனால் நீளமாக இருந்தால், அவற்றை முற்றிலும் நீங்குவது என்பது கடினமான ஒன்று. மேலும் நீக்க நினைத்தால், ரேசரில் இருக்கும் பிளேடுகள் பாதிக்கப்படும். ஆகவே அப்போது அந்த நீளமான முடியை ஒரு கத்திரிக்கோலால் ட்ரிம் செய்துவிட்டு, பின்பு ஷேவ் செய்ய வேண்டும்.
ட்ரிம் செய்யலாம் என்று நினைத்தால், முதலில் தாடி ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு ஈரத்துடன் இருந்தால், முடி வேரோடு வந்துவிடும். பின் அந்த இடம் புடைத்தோ அல்லது சிவப்பு நிறத்திலோ காணப்படும். மேலும் ட்ரிம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ட்ரிம் செய்ய எலக்ட்ரிக் ட்ரிம்மரை வாங்கியோ அல்லது கைகளில் செய்யத் தெரிந்தால் கத்திரிக்கோலிலோ செய்யலாம். ஆனால் எலக்ட்ரிக் ட்ரிம்மரில் செய்வதே சிறந்தது.
ட்ரிம் செய்தப் பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் வெதுவெதுப்பான நீர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, முகத்தை மென்மையாக வைக்கும். ஆனால் சூடான தண்ணீரில் கழுவிட வேண்டாம். ஏனென்றால் அது முகத்தில் அரிப்புகளை ஏற்படுத்தும். மேலும் முகத்தை கழுவியப் பின் மென்மையான துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.
ஷேவிங் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் நனைக்க வேண்டும். அவ்வாறு நனைத்து, முகம் ஈரமாக இருக்கும் போதே, ஷேவிங் ஆயிலை முகத்திற்கு தடவ வேண்டும். ஏனெனில் அந்த ஆயில் ஈரமில்லாமல் இருக்கும் முடியையும் ஈரமாக்கும். மேலும் இந்த ஆயில் ஷேவ் செய்யும் போது மிகவும் மென்மையாக முடியை நீக்கும். இதனால் ரேசரால் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.
ஷேவிங் ஆயிலை முகத்திற்கு தடவியப் பின், ஷேவிங் கிரீமை ஷேவிங் பிரஷ்ஷில் வைத்து முகத்திற்கு தடவ வேண்டும். பின் சிறிது தண்ணீரை நனைத்து, முகத்தில் மறுபடியும் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு நிமிடம் ஊற விடவும். ஏனெனில் இதனால் கடினமாக இருக்கும் முடி மென்மையாக மாறும். இதனால் ஈஸியாக ஷேவ் செய்யலாம்.
ஷேவ் செய்வதற்கு ரேசரை எடுத்தப் பின்னர், அதில் இருக்கும் பிளேடு கூர்மையாக உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் ஷேவ் செய்யும் போது, முக்கியமாக அழுத்தி செய்துவிட வேண்டாம். இல்லையென்றால் முகத்தில் இரத்தக் காயத்தை பார்க்க நேரிடும். ஆகவே ரேசரை எடுத்து முகத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, பின்னர் நீரில் நனைத்து, மறுபடியும் மற்றொரு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். எப்போதும் சுத்தம் செய்யும் போதும், ரேசரை கீழ்நோக்கியே சுத்தம் செய்ய வேண்டும்.
ஷேவிங் முற்றிலும் முடிந்த பின்னர், உள்ளங்கைகளால் வெதுவெதுப்பான நீரில் நனைத்து, ஷேவ் செய்த இடத்தில் வைக்க வேண்டும். மேலும் இப்போது ஏதேனும் விடுபட்ட முடி உள்ளதா என்று பார்த்து, முடி இருந்தால் சுத்தம் செய்துவிடவும்.
மேற்கூறிய அனைத்தும் முடிந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி, பின்னர் ஷேவிங் பாம் அல்லது ஷேவிங் லோசனை தடவ வேண்டும். அதிலும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால், முகச்சருமமானது வறட்சி அடையாமல், ரேசர் பயன்படுத்தியதால் அரிப்போ அல்லது எரிச்சலோ ஏற்படாமல் இருக்கும். மேலும் முகமும் பொலிவோடும், அழகோடும் காணப்படும்.



Click it and Unblock the Notifications