Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
பளபளப்பான முகத்திற்கு ஏற்ற பருவக்கால 'ப்ரூட் ஸ்கரப்'ஸ்...

பளபளப்பான முகத்தைப் பெற...
ஸ்ட்ராபெர்ரி : கண்ணை பறிக்கும் நிறத்தையும், அழகான வடிவத்தையும், சதை மிகுந்த பகுதியையும் உடைய ஸ்ட்ராபெர்ரி, முகத்திற்கு ஸ்கரப் செய்வதற்கு மிகவும் ஏற்ற பழம். இத்தகைய பழத்தை வாங்கி சாப்பிடும் போது, அதிகம் கனிந்த பழங்களை தூக்கிப் போடாமல், அவற்றை முகத்திற்கு அழகுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.
அதற்கு அந்த கனிந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு மசித்துக் கொண்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். இது சருமத்தில் சற்று எண்ணெயை தக்க வைக்கிறது. சாதாரணமாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு அரைத்து, அத்துடன் சிறிது சர்க்கரையை சேர்த்து , முகத்தில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு 2 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவிட வேண்டும்.
வாழைப்பழம் : சரும பராமரிப்பிற்கு ஏற்ற பழம் என்றால் அது வாழைப்பழம் தான். இதன் கனிந்த பழத்தை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், பழத்தின் அனைத்து சத்துக்களும் முகத்திற்கு அப்படியே போகும். மேலும் அதனால் சருமமானது சற்று இறுக்கமடைவதுடன், தேவையற்ற இறந்த செல்களையும் எளிதில் நீக்கிவிடும். அதற்கு வாழைப்பழத்தை நன்கு அரைத்து அதில் சிறிது வெண்ணிலா சாற்றை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு முகத்திற்கு தடவி, 3 நிமிடம் ஊற வைத்து, பின்பு கழுவவும். இதனால் முகமானது பளிச்சென்று ஆவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.
பப்பாளி : பப்பாளிப் பழத்தில் இருக்கும் பாபெயின் என்னும் நொதிப்பொருள், சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தையும் மென்மையாக்கும். மேலும் அதில் செய்யப்படும் ஃபேசியல் ஸ்கரப் தோலின் துளைகளில் இருக்கும் அழுக்கு, தூசிகளை நீக்குவதோடு, சருமடத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இல்லாமலும் பார்த்துக் கொள்ளும். ஆகவே அதற்கு பப்பாளியை நன்கு அரைத்துக் கொண்டு, சிறிது ஓட்ஸ் மீல், சர்க்கரை சேர்த்து, நன்கு சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகத்திற்கு தடவி, 1 நிமிடம் நன்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை பால் அல்லது நீரில் கழுவ வேண்டும்.
பீச் : பீச் பழத்தை நன்கு அரைத்துக் கொண்டு, அதில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு கழுவ வேண்டும். இதனால் சருமமானது நன்கு இறுக்கமடைவதுடன், ஈரப்பசையுடனும் இருக்கும். மேலும் இதனால் செய்யப்படும் கிரீமைப் பயன்படுத்தினால் முகமானது சிகப்பாகவும் மாறும். அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை பேஸ் செய்து, அதோடு பால் சேர்த்து முகத்திற்கு தடவி, 2 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், முகமானது நல்ல நிறத்தையும் பெறும்.
ஆகவே வீட்டில் சாப்பிட வாங்கும் பழங்களை தூக்கிப் போடாமல், அதனை ஸ்கரப் போல் செய்து சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தினால் முகமானது அழகாக இருப்பதோடு, பளபளப்போடும், சருமத்திற்கு தேவையான ஈரப்பசையுடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications