Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
அழகான உடலுக்கு சங்கு மாதிரி கழுத்தை பெற இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
ஒரு பெண்ணுக்கு முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது.. அவளின் கை, கால்களுடன் அழகான உடலும் சங்கு போன்ற கழுத்தும்தான் அழகாக இருக்க வேண்டும்.. அது அந்த அழகை இன்னும் மெருகேற்றுகின்றன.. சிலருக்கு முதுகுப் பகுதியில் முகப்பரு வடுக்கள் ஏற்படும். மற்றவர்கள் வறட்சியின் காரணமாக தோல் உதிர்வதை எதிர்க்கொள்கிறார்கள்..
அப்படி பருக்களும் வறண்ட சருமமும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சங்கு போன்ற மென்மையான கழுத்தும், அழகான முதுகும் இருக்க வேண்டுமென்றால் இந்த முன்னெச்சரிக்கைகள் அவசியம். அது என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம் வாங்க..

1. கழுத்து தோல் உணர்திறன் மிக்கது.. எனவே அதனை தேய்த்தல் மூலம் சுத்தம் செய்யக்கூடாது. குளிக்கும்போது கூந்தல் மற்றும் கழுத்தில் உள்ள அழுக்கை எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
2. பப்பாளிக் கூழை ஒரு பேக் போல பத்து நிமிடம் தடவி, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், பளபளப்பான நிறம் மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கும்.
3. கழுத்து கருப்பாக இருப்பவர்கள் பப்பாளி கூழ் பேக் போட்டால் கழுத்து வெள்ளையாக மட்டுமின்றி மிருதுவாகவும் இருக்கும்.
4. சூரிய ஒளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கழுத்தை வெந்நீரில் கழுவவும். அதன் பிறகு, மென்மையான துண்டுடன் துடைக்கவும்.
5. கழுத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு ஸ்பூன் பால், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கழுத்தில் தடவவும்.
6. வெந்தய இலை மற்றும் உளுந்து மாவின் சாறு கழுத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கழுத்து அழகாக பளபளக்கும்.
7. ஒரு டவலை வெந்நீரில் நனைத்து, இறுக்கமாக பிழிந்து, கழுத்தில் சுற்றி, பத்து நிமிடம் வைத்திருக்கவும். இது சருமத்தை சூடாக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
8. கற்றாழை கூழ், மஞ்சள் மற்றும் உளுந்து மாவு கலந்து கழுத்தில் இருந்து தோள்பட்டைக்கு கீழே ஒரு பேக் போடவும். பின்னர் வெந்நீரில் ஊறவைத்த பருத்தியைக் கொண்டு பேக்கை முழுவதுமாக அகற்றவும்.
9. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை, கழுத்தை தூக்கி, வளைத்து, நான்கு நிமிடங்கள் சுழற்ற வேண்டும். இதன் காரணமாக கழுத்து தசைகள் நன்றாக வேலை செய்கின்றன.
10. கில்ட் நகைகளை அணிவதால் கரும்புள்ளிகள் ஏற்படும். அவை அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே கோடையில் தங்க நகைகளை அணியாமல் இருப்பது நல்லது. ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கழுத்தை மசாஜ் செய்வதன் மூலம் முழுப் பகுதியும் மென்மையாக மாற்றும். இரவில் படுக்கும் முன் ஆலிவ் எண்ணெயைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.



Click it and Unblock the Notifications