Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
தலைமுடியை இப்படி அடர்த்தியா நீளமாக வளரச் செய்யும் வல்லாரை கீரை... எப்படி தேய்க்கணும்?
தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்ற வல்லாரை பொடி பற்றி இந்த கட்டுரையில் விரிவாக விளக்கப்படுகிறது.
நமது இந்திய பராம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகமாக பயன்படுத்தி வரும் தாவரம் தான் இந்த பிராமி. இது பாகோபா மோனிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த இயற்கை மூலிகை நிறைய விதங்களில் பயன்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த பிராமி நினைவாற்றலை அதிகரித்தல், கூந்தல் வளர்ச்சிக்கு என்று நிறைய வகைகளில் பயன்படுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சீமர் நோய், அனிஸ்சிட்டி, கவனக் குறைவு நோய், அழற்சி போன்ற நோய்களுக்கும் சிறந்தது. இது மன அழுத்தத்தை குறைக்கும் டானிக் என்றே கூறலாம்.

வல்லாரை பொடி
இந்த தாவரத்தை நிறைய பேர்கள் மன நோய், முதுகு வலி, மூட்டு வலி மற்றும் பாலியல் செயல்திறன் சிகச்சைக்கு கூட பயன்படுத்துகின்றனர். மேலும் பிராமி கூந்தல் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த ஒன்று. இருப்பினும் இந்த மூலிகை கூந்தல் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இங்கே பார்க்க உள்ளோம்.

எப்படி பயன்படுத்துவது?
இது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுவதோடு மூளையில் உள்ள கெமிக்கல்களை தூண்டி மூளையை கூர்மையாக வைக்க உதவுகிறது. பிராமி வேர்க்கால்களை வலிமையாக்கி முடியை வலிமையாக்குகிறது. எனவே இது முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. பிராமி பவுடரை நேச்சுரல் முடி வளர்ச்சி மருந்தாக கூட பயன்படுத்தி வரலாம். பலன் கிடைக்கும்.

எப்படி கலக்க வேண்டும்?
இந்த பிராமி இலைகள் அருகில் உள்ள மார்க்கெட்டில் கூட கிடைக்கும். இதை உலர்த்தி காய வைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் புல்லின் பச்சை வாசனை மாதிரி இருக்கும். வேண்டும் என்றால் இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள்.

எப்படி தேய்க்க வேண்டும்?
மேலும் இந்த பிராமியுடன் நெல்லிக்காய், துளசி மற்றும் வேப்பிலை போன்றவற்றை கூட சேர்த்து கொள்ளலாம். பிராமியுடன் இந்த மாதிரியான பவுடர் அல்லது ஆயில் சேர்த்து பயன்படுத்தும் போது கூடுதல் நன்மை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள். இந்த பேஸ்ட்டை தலை மற்றும் கூந்தலில் தடவி 45-50 நிமிடங்கள் காய வையுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பயன்கள்
பிராமி கூந்தலை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்கிறது. பிராமி பவுடர் பிளவுபட்ட நுனிகளை சரி செய்து சில வாரங்களில் நலல மாற்றத்தை தருகிறது.
மயிர்க்கால்களில் உள்ள பாதிப்பை தடுத்தல், வேர்க்கால்களுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுத்து முடி உதிர்வை தடுத்தல், அடர்த்தியான நீளமான கூந்தலாக மாற்றுதல், பொடுகு மற்றும் அரிப்பு, வறண்ட தலை சருமம் போன்ற பாதுகாப்பை தருகிறது.
எனவே இனி உங்கள் கூந்தல் அழகுக்கு கண்ட கண்ட எண்ணெய்களை தேய்க்காமல் பிராமி எண்ணெய் தேயுங்கள். நன்மைகள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications