Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு
நரை முடி இயற்கையானதுதான். அதனை கருப்பாக மாற்றி வயதை மறைக்க நினைப்போம். அது தவறில்லை. ஆனால் கெமிக்கல் டை பக்கம் போய்விடாதீர்கள். இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள். நிச்சயம் பலன் தருபவை.
உங்கள் கூந்தலின் மயிர்கால்கள் கெரட்டின் என்ற புரோட்டினால் ஆனது. கூந்தல் வளரும்போது மெலனோசைட் சுரப்பி மயிர்கால்களுக்கு மெலனின் என்ற ஹார்மோனை செலுத்துகிறது. இதனால் கூந்தல் கருமையாகும்.
எப்போது மெலனோசைட் சுரப்பது குறைகிறதோ அப்போது கூந்தலில் கருப்பு நிறமில்லாமல் வெள்ளையாகிறது.

இதற்கு கெமிக்கல் நிறைந்த டைக்களை உபயோகிப்பது எத்தனை அபாயம்
தரும் என்பதை உணர்கிறீர்களா?
உங்களுக்கு வெள்ளை முடியை கருமையாக மாற்றச் செய்யும் மாயத்தை நமது இயற்கையான மூலிகைகள் பெற்றுள்ளன. இவை மல்னோசைட்டை தூண்டி கூந்தலின் நிறத்தை மாற்றும். எப்படி என பார்க்கலாம்.

கற்பூர வள்ளி இலை :
கற்பூர வள்ளி இலைகளை நீரில் 20 நிமிடம் கொதிக்க வையுங்கள்.( உங்கள் தலைமுடிக்கேற்ற அளவு) . அதன் பின் ஆறியதும் வடிகட்டி தலைக்கு அந்த நீரை தடவுங்கள். 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். சில வாரங்கள் தொடர்ச்சியாக செய்தால் நரை முடி மறைவதை காணலாம்.

பீர்க்கங்காய் :
பீர்க்கங்காயை நன்றாக வெயிலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போடவும். 3 நாட்களுக்கு அப்படியே வைத்திடுங்கள்.
அதன் பின் எண்ணயை குறைந்த தீயில் கொதிக்கவிடுங்கள். கருமையான நிறத்தில் திட்டுகளாக எண்ணெயில் மிதக்கும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் இறக்கி ஆற வைத்து அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து 2 மணீ நேரம் கழித்து தலை முடியை அலசுங்கள்.

கருப்பு தேயிலை டை :
கருப்பு தேயிலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
நீர் -
புதிதான கருப்பு தே நீர் இலைகள் இதற்கு வேண்டும். அவற்றை நீரில் போட்டு கொதிக்க விடுங்கள்.20 நிமிடம் ஆனதும் அடுப்பை அணைத்து நீரை ஆறவிட்டபின் வடிக்கட்ட வேப்ண்டும்.
இதனை தலையில் தேய்த்து 1 மணி நேரம் பிறகு தலைமுடியை வெறுமனே அலசுங்கள்.

தோட்டத்து மண் :
தோட்டத்திலிருக்கும் ஆழமான மண்ணை தோண்டி எடுத்து நீரில் கரைத்திடுங்கள். பின்னர் அதனை வடிகட்டி அந்த வடிகட்டிய நீரை தலையில் தேய்க்கவும்.
10 நிமிடம் கழித்து நன்றாக தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் முடியும் நன்றாக வளரும். கருமையும் காணாமல் போகும்.

எள்ளு :
எள்ளுவை நீரில் ஊற வையுங்கள். அரை மணி நேரம் கழித்து அதனை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனை தலையில் த்டவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிக்கவும்.



Click it and Unblock the Notifications