Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு
நரை முடி இயற்கையானதுதான். அதனை கருப்பாக மாற்றி வயதை மறைக்க நினைப்போம். அது தவறில்லை. ஆனால் கெமிக்கல் டை பக்கம் போய்விடாதீர்கள். இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள். நிச்சயம் பலன் தருபவை.
உங்கள் கூந்தலின் மயிர்கால்கள் கெரட்டின் என்ற புரோட்டினால் ஆனது. கூந்தல் வளரும்போது மெலனோசைட் சுரப்பி மயிர்கால்களுக்கு மெலனின் என்ற ஹார்மோனை செலுத்துகிறது. இதனால் கூந்தல் கருமையாகும்.
எப்போது மெலனோசைட் சுரப்பது குறைகிறதோ அப்போது கூந்தலில் கருப்பு நிறமில்லாமல் வெள்ளையாகிறது.

இதற்கு கெமிக்கல் நிறைந்த டைக்களை உபயோகிப்பது எத்தனை அபாயம்
தரும் என்பதை உணர்கிறீர்களா?
உங்களுக்கு வெள்ளை முடியை கருமையாக மாற்றச் செய்யும் மாயத்தை நமது இயற்கையான மூலிகைகள் பெற்றுள்ளன. இவை மல்னோசைட்டை தூண்டி கூந்தலின் நிறத்தை மாற்றும். எப்படி என பார்க்கலாம்.

கற்பூர வள்ளி இலை :
கற்பூர வள்ளி இலைகளை நீரில் 20 நிமிடம் கொதிக்க வையுங்கள்.( உங்கள் தலைமுடிக்கேற்ற அளவு) . அதன் பின் ஆறியதும் வடிகட்டி தலைக்கு அந்த நீரை தடவுங்கள். 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். சில வாரங்கள் தொடர்ச்சியாக செய்தால் நரை முடி மறைவதை காணலாம்.

பீர்க்கங்காய் :
பீர்க்கங்காயை நன்றாக வெயிலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போடவும். 3 நாட்களுக்கு அப்படியே வைத்திடுங்கள்.
அதன் பின் எண்ணயை குறைந்த தீயில் கொதிக்கவிடுங்கள். கருமையான நிறத்தில் திட்டுகளாக எண்ணெயில் மிதக்கும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் இறக்கி ஆற வைத்து அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து 2 மணீ நேரம் கழித்து தலை முடியை அலசுங்கள்.

கருப்பு தேயிலை டை :
கருப்பு தேயிலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
நீர் -
புதிதான கருப்பு தே நீர் இலைகள் இதற்கு வேண்டும். அவற்றை நீரில் போட்டு கொதிக்க விடுங்கள்.20 நிமிடம் ஆனதும் அடுப்பை அணைத்து நீரை ஆறவிட்டபின் வடிக்கட்ட வேப்ண்டும்.
இதனை தலையில் தேய்த்து 1 மணி நேரம் பிறகு தலைமுடியை வெறுமனே அலசுங்கள்.

தோட்டத்து மண் :
தோட்டத்திலிருக்கும் ஆழமான மண்ணை தோண்டி எடுத்து நீரில் கரைத்திடுங்கள். பின்னர் அதனை வடிகட்டி அந்த வடிகட்டிய நீரை தலையில் தேய்க்கவும்.
10 நிமிடம் கழித்து நன்றாக தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் முடியும் நன்றாக வளரும். கருமையும் காணாமல் போகும்.

எள்ளு :
எள்ளுவை நீரில் ஊற வையுங்கள். அரை மணி நேரம் கழித்து அதனை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனை தலையில் த்டவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிக்கவும்.



Click it and Unblock the Notifications











