Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
கூந்தல் உதிர்தலை கட்டுப்படுத்த வேப்பெண்ணெயை எப்படி உபயோகப்படுத்துவது?
வேப்பெண்ணெய் வேப்ப மரத்தில்ருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயாகும். இது பல அரிய மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. உடல் வலிமை தருவதைப் போல் கூந்தலுக்கும் வலிமை தருகிறது.
கூந்தல் கருமையாக நரை முடி இல்லாமல் இன்னும் நிறைய பாட்டிகள் கிராமத்தில் வலம் வருகிறார்கள்.
இதற்கு காரணம் வேப்பெண்ணெய்தான். கிராமங்களில் இப்பவும் வேப்பெண்ணெய் தலைக்கு தடவுபவர்கள் உண்டு.

வேப்பெண்ணெய் கொண்டு எப்படி உங்கள் கூந்தல் நீளமாக வளரச் செய்வது என பார்க்கலாம்.

கூந்தல் எண்ணெய் :
அரை கப் தேங்காய் எண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் மற்றும் 10 துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள்.
இதனை லேசாக சூடுபடுத்தி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தாக் முடி உதிர்வது தடுக்கப்பட்டு நீளமாக வளரும்.

பொடுகு மாஸ்க் :
1 டீஸ்பூன் வெந்தயப்பொடி, 1 டீஸ் பூன் நெல்லிக்காய் பொடி, 2 துளி தேயிலை மர எண்ணெய் இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற விடுங்கள்.
பின் தலைமுடியை அலசவும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

கூந்தல் அரிப்பிற்கு :
சம அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் பின்பு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலாசுங்கள். வறட்சி மறைந்து கூந்தல் பளபளக்கும்.

கண்டிஷனர் :
தலைமுடி வேர்க்கால்களுக்கு பலம் தரும் வகையில் , வேப்பெண்ணெயுடன் ஒரு முட்டை வெள்ளைக் கருவை கலந்து ஸ்கால்ப்பில் தடவுங்கள். முடி காய்ந்தவுடன் தலைக்கு குளிக்கவும்.

கூந்தல் மிருதுவாக :
நீங்கள் உபயோகிக்கும் ஷாம்புவுடன் சிறிது வேப்பெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை தலைக்கு குளிக்கும்போது உபயோகித்தால் ஷாம்புவினால் வறட்சி உண்டாகாமல் கூந்தல் மிருதுவாகும். ரசாயன பாதிப்புகள் இருக்காது.



Click it and Unblock the Notifications