Latest Updates
-
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்..
கூந்தல் உதிர்தலை கட்டுப்படுத்த வேப்பெண்ணெயை எப்படி உபயோகப்படுத்துவது?
வேப்பெண்ணெய் வேப்ப மரத்தில்ருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயாகும். இது பல அரிய மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. உடல் வலிமை தருவதைப் போல் கூந்தலுக்கும் வலிமை தருகிறது.
கூந்தல் கருமையாக நரை முடி இல்லாமல் இன்னும் நிறைய பாட்டிகள் கிராமத்தில் வலம் வருகிறார்கள்.
இதற்கு காரணம் வேப்பெண்ணெய்தான். கிராமங்களில் இப்பவும் வேப்பெண்ணெய் தலைக்கு தடவுபவர்கள் உண்டு.

வேப்பெண்ணெய் கொண்டு எப்படி உங்கள் கூந்தல் நீளமாக வளரச் செய்வது என பார்க்கலாம்.

கூந்தல் எண்ணெய் :
அரை கப் தேங்காய் எண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் மற்றும் 10 துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள்.
இதனை லேசாக சூடுபடுத்தி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தாக் முடி உதிர்வது தடுக்கப்பட்டு நீளமாக வளரும்.

பொடுகு மாஸ்க் :
1 டீஸ்பூன் வெந்தயப்பொடி, 1 டீஸ் பூன் நெல்லிக்காய் பொடி, 2 துளி தேயிலை மர எண்ணெய் இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற விடுங்கள்.
பின் தலைமுடியை அலசவும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

கூந்தல் அரிப்பிற்கு :
சம அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் பின்பு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலாசுங்கள். வறட்சி மறைந்து கூந்தல் பளபளக்கும்.

கண்டிஷனர் :
தலைமுடி வேர்க்கால்களுக்கு பலம் தரும் வகையில் , வேப்பெண்ணெயுடன் ஒரு முட்டை வெள்ளைக் கருவை கலந்து ஸ்கால்ப்பில் தடவுங்கள். முடி காய்ந்தவுடன் தலைக்கு குளிக்கவும்.

கூந்தல் மிருதுவாக :
நீங்கள் உபயோகிக்கும் ஷாம்புவுடன் சிறிது வேப்பெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை தலைக்கு குளிக்கும்போது உபயோகித்தால் ஷாம்புவினால் வறட்சி உண்டாகாமல் கூந்தல் மிருதுவாகும். ரசாயன பாதிப்புகள் இருக்காது.



Click it and Unblock the Notifications