Latest Updates
-
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
பளபளக்கும் கூந்தல் வேண்டுமா? இதைப்படிங்க!

இன்றைய காலக் கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை! கூந்தல் உதிர்வது, பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாதுஉப்புக்கள் குறைவதே ! இந்த குறைபாடுகளால் தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம். புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள் , பால் பொருட்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் இவை முடியை நன்கு வளர வழி வகுக்கும். ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு உபயோகிப்பதை விட இயற்றை பொருட்களான சிகைக்காய், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய், வினிகர் போன்றவை கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
வறண்ட கூந்தலுக்கு எலுமிச்சை சாறு,முட்டையின் வெள்ளை கரு, தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாக மாறும். கூந்தலுக்கு தேன் தேய்த்துக் குளித்தால் முடி உதிரும் பிரச்சனை நீங்கும். குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.மேலும் தேனில் பாலாடை கலந்து தேய்த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கும்.
நாம் உபயோகிக்கும் ஷாம்பு அதிக ரசாயனக் கலப்பு இல்லாத மைல்டாக இருக்க வேண்டும். பொடுகு இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.



Click it and Unblock the Notifications











