Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
குளிர்காலத்துல கூந்தல் ஆரோக்கியமா இல்லைன்னு எப்படி தெரிஞ்சுக்குறது?

* கூந்தல் பாதிப்படைந்துள்ளதென்றால், கூந்தல் முதலில் அதன் மென்மைத் தன்மையை இழந்து காணப்படும். மேலும் திடீரென பட்டுப்போன்று அழகாகக் காணப்படவில்லையெனில், அது ஆரோக்கியமற்று உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* அடுத்ததாக கூந்தலின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு காணப்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்புகள் கூந்தலின் முனைகளில் இரண்டாக பிளவுபட்டு, கூந்தலின் அழகையே கெடுத்து, முரட்டுத்தனமான தோற்றத்தில் காணப்படும்.
* பிளவுகள் ஏற்பட்டாலே, சாதாரணமாக வளரும் கூந்தலின் வளர்ச்சியில் தடை ஏற்படும். இதனால் கூந்தலின் மயிர்கால்களில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* எப்போது கூந்தலின் இயற்கை நிறமான கருப்பு நிறம் மாறி, செம்பட்டை நிறத்தில் மாறுகிறதோ, அதை வைத்தும் கூந்தலின் ஆரோக்கியமற்ற நிலையை தெரிந்து கொள்ளலாம்.
* முடியை சீவும் போது அதிகமான அளவில் கூந்தல் சீப்புடன் வந்தால், கூந்தல் முற்றிலும் வலுவை இழந்து மோசமான நிலையில் உள்ளது என்பதை அறியலாம்.
* ஆரோக்கியமற்ற கூந்தலுக்கும், கூந்தல் வறட்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் கூந்தல் வறட்சி அதிக அளவில் இருப்பின் அது கூந்தல் அதிகம் பாதிப்படைந்துள்ளது என்பதற்கு அறிகுறி. ஆகவே அடிக்கடி எண்ணெய் குளியலை மேற்கொள்வது நல்லது.
* சிலருக்கு கூந்தலின் முனைகள் மட்டும் அடர்த்தி குறைவாக காணப்படும். இவ்வாறு இருந்தாலும் எளிதில் கூந்தலின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.
* இளம் வயதிலேயே வெள்ளை முடியானது வந்துவிடுகிறது. சிலருக்கு அது பரம்பரையின் காரணமாக இருக்கலாம். ஆனால் அது இல்லாமல், வெள்ளை முடி 25 வயதிலேயே வந்துவிட்டால், கூந்தலில் ஏதோ பிரச்சனை என்பதை அறியலாம்.
மேற்கூறியவையே கூந்தல் பாதிப்படைந்துள்ளதை தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள். வேறு ஏதாவது அறிகுறிகள் உங்களுக்குத் தெரியுமா?



Click it and Unblock the Notifications











