Latest Updates
-
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும்?

கூந்தலை சீவ சில டிப்ஸ்...
1. தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவும் போது முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பைக் கொண்டு சீவினால், முடியானது கொத்தாக வேரோடு தான் வரும். ஆகவே தலைக்கு குளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 10 நிமிடம் முன்னர் எழுந்து தலைக்கு குளித்து, நன்கு முடியானது காய்ந்ததும், பின் சீப்பை போடுங்கள்.
2. கூந்தலை சீவும் போது தலைச் சருமத்திலும் நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்க படும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.
3. கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது, கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் அந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.
4. அடர்த்தியான, நீளமான கூந்தல் இருந்தால், சீவும் போது இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியாக சீவலாம். இதனால் கூந்தலில் சிக்குகள் அதிகம் ஏற்படாது.
5. கூந்தலை சீவும் போது அடிக்கடி ஸ்டைலை மாற்றுங்கள். ஏனென்றால் கூந்தலை அடிக்கடி ஒரே ஸ்டைலில் சீவினால் கூந்தலானது உதிரும். உதாரணமாக, கூந்தலை எப்போதும் பின்புறமாகவே எடுத்து சீவினால், நெற்றியானது பெரிதாகிக் கொண்டே இருக்கும். ஆகவே அடிக்கடி மாற்றி சீவுங்கள்.
6. மேலும் கூந்தலை இறுக்கமாக கட்ட கூடாது. நிறைய பேர், இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். இது ஒரு கெட்ட பழக்கம். எப்படியெனில் கூந்தலை போனி டைல் போடும் போது, முடியானது இடையில் கட் ஆகி உதிரும்.
ஆகவே மேற்கூரியவாறெல்லாம் நினைவில் கொண்டு கூந்தலை சீவுங்கள், கூந்தல் உதிராமல், நீளமாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications











