Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க...
கண்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் புருவங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய புருவங்களானது சிலருக்கு அடர்த்தியாக இருக்காது. இதனால் அவர்கள் புருவங்கள் நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வெளிப்பட பென்சிலைப் பயன்படுத்துவார்கள். இப்படி எத்தனை நாள் தான் பயன்படுத்துவீர்கள். ஆகவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க புருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
அதற்காக அழகு நிலையங்களுக்கு செல்வதோ அல்லது விலை உயர்ந்த க்ரீம்களையோ வாங்கி பயன்படுத்தவோ வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு புருவங்களை பராமரித்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இப்போது அடர்த்தியான புருவங்களைப் பெற உதவும் அந்த வழிகளைப் பார்ப்போம்.

விளக்கெண்ணெய்
தினமும் இரவில் படுக்கும் போது புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், நிச்சயம் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதுடன், கருமையாகவும் வளரும்.

வேஸ்லின்
தினமும் 2-3 முறை புருவத்திற்கு வேஸ்லின் தடவி வந்தாலும், புருவங்களானது அடர்த்தியாக வளரும்.

தேங்காய் எண்ணெய்
பொதுவாக தேங்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே அத்தகைய தேங்காய் எணணெயை தினமும் இரவில் படுக்கும் போது சூடேற்றி வெதுவெதுப்பான நிலையில் புருவங்களில் தடவி, இரவு முழுவதுங்ம ஊற வைத்து வந்தால், நாளடைவில் புருவங்களானது நன்கு வளர்வதைக் காணலாம்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருப்பதால், அவற்றை அன்றாடம் புருவங்களில் தடவி வந்தால், புருவத்தின் அடர்த்தி அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலும் மிகவும் சிறப்பான பொருள். அதனைக் கொண்டும் தினமும் புருவங்களை மசாஜ் செய்து ஊற வைத்து வைத்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

கற்றாழை ஜெல்
கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருப்பதுடன், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

வெங்காய சாறு
வெங்காய சாற்றினை காட்டனில் நனைத்து புருவங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை செய்து வந்தாலும் புருவங்கள் வளரும்.

தேங்காய் பால்
தேங்காய் பால் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பான பொருள். எனவே அதனைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், புருவங்கள் நன்கு வளர்ச்சியடையும்.

முட்டையின் மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களுக்கு தடவி வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

வெந்தயம்
வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அதனை பேஸ்ட் செய்து புருவங்களின் மேல் தடவி ஊற வைத்து கழுவினால், புருவங்களின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து புருவங்கள் நன்கு வளரும்.

எலுமிச்சை
எலுமிச்சையை புருவங்களில் தடவி வந்தாலும், புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

பால்
தினமும் குளிர்ந்த பாலை புருவங்களின் மேல் தடவி ஊற வைத்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்வதைக் காணலாம்.



Click it and Unblock the Notifications