Just In
- 21 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 48 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இதுவரை கேட்டிராத சில பியூட்டி ட்ரிக்ஸ்...
சருமம் அழகாகவும், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கவும் அழகு சாதனப் பொருட்கள் நிச்சயம் வேண்டும் என்று யார் சொன்னது. கடவுள் நமக்கு கொடுத்த பல்வேறு இயற்கை பொருட்கள் இருக்க, நாம் ஏன் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த அழகு சாதனப் பொருட்களால் சருமம் தற்காலிகமாக அழகாக வெளிப்படுமே தவிர, நாளடைவில் அந்த பொருட்கள் சருமத்தை முதுமை தோற்றத்திற்கு கொண்டு வந்துவிடும்.
ஆகவே சருமத்தின் அழகை பாதுகாக்கவும், அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தாமல் சருமத்தை அழகாக்கவும் ஒருசில பியூட்டி ட்ரிக்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அவை அனைத்தும் எளிமையாக இருப்பதோடு, எந்த ஒரு பக்கவிளைகளையும் ஏற்படுத்தாது. மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ட்ரிக்ஸ்களை முயற்சித்தால், பல்வேறு அழகு பிரச்சனைகளைப் போக்கலாம்.
சரி, இப்போது அந்த பியூட்டி ட்ரிக்ஸ்களைப் பார்ப்போமா!!!
குளிர்ச்சியான ஸ்பூன்
கண்களை அழகாக்குவதற்கு கண்களுக்கு மஸ்காரா போடுவோம். அப்படி மஸ்காரா போடும் போது, அது சற்று பட்டையாகிவிட்டால், அப்போது குளிர்ச்சியாக இருக்கும் ஸ்பூனைக் கொண்டு அதிகப்படியாக இருக்கும் மஸ்காராவை எடுத்தால், மஸ்காரா கண்களில் பரவாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு
சிலருக்கு காலை எழுந்ததும் கண்கள் வீங்கி காணப்படும். இப்படி ஏற்படும் வீக்கத்தை உடனே குறைக்க, உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் 6 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் மறையும்.
காபி தூள்
முதுமைத் தோற்றத்தைத் தடுப்பதில் காபி தூள் சிறந்த பொருள். அதற்கு காபி தூளில் சிறிது தண்ணீர் கலந்து, அதனை முகத்தில் தடவி தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முதுமைத் தோற்றம் தடைப்படும்.
மயோனைஸ்
மயோனைஸை கூந்தலில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளித்து, உலர வைத்தால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் நன்கு அழகாக பட்டுப் போன்று இருக்கும்.
எலுமிச்சை
நெயில் பாலிஷ் கட்டி சேர ஆரம்பித்தால், அப்போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஊற வைத்தால், நெயில் பாலிஷ் மென்மையாவதோடு, அழகான நிறத்தையும் கொடுக்கும்.
வெங்காயம்
வெங்காயத்தைக் கொண்டு சருமத்தை தேய்த்தால், அதிலிருந்து வெளிவரும் ஒருவித அமிலம் முகப்பருக்களை நீக்குவதோடு, சரும பிரச்சனைகளையும் போக்கும்.
குளிர்ச்சியான நீர்
வறட்சியான சருமம் உள்ளவர்கள், குளிர்ச்சியான உப்பு நீரில் கைகள் மற்றும் கால்களை ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் அழகாக வெளிப்படும்.
தேங்காய் எண்ணெய்
மிகவும் சிறந்த மாய்ஸ்சுரைசர் என்று சொன்னால், அது தேங்காய் எண்ணெய் தான். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை முகத்தில் தடவி 10 நிமடம் மசாஜ் செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், வறட்சியில்லாமலும் இருக்கும்.
வெண்ணெய்
நகங்கள் பொலிவிழந்து மங்கிய நிறத்தில் காணப்படுகிறதா? அப்படியெனில் தினமும் இரவில் வெண்ணெயை நகங்களில் தடவி ஊற வைத்து வந்தால், நகங்கள் பொலிவாக காணப்படும்.
வேர்க்கடலை
தினமும் பச்சையான வேர்க்கடலையை அரைத்து, அதனை தழும்புகள் உள்ள இடங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வந்தால், தழும்புகள் மறையும்.