Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
கால்களில் இருந்து கப்ஸ் கிளம்புதா? இதப்படிங்க!

வாசனைத் தைலம்
ஷூ அணிந்து கொண்டிருப்பவர்கள் வெளியில் சென்றுவிட்டு வந்து ஷூவை கழற்றினாலே கப் அடிக்கும். இதற்கு காரணம் காலில் ஏற்படும் வியர்வையும், கால்களில் உள்ள புண்களுமே. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கால்களின் துர்நாற்றத்தைக் கட்டுப் படுத்த முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பாதங்களை உலர்வாக வைத்திருப்பதில் டால்கம் பவுடருக்கு சிறந்த பங்குண்டு. அதேபோல் பேக்கிங் சோடா, கார்ன் ப்ளவர் போன்றவைகளை உபயோகிக்கலாம். பாதங்களில் சந்தனத்தை பூசி மென்மையாக்கலாம். பாதங்கள் இயல்பாய், புத்துணர்ச்சியோடு சுவாசிக்கும்.
ஆன்டி பாக்டீரியல் சோப்
கோடை காலத்தில் சாதாரண சோப்பிற்கு பதிலாக ஆன்டிபாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். இது புண்கள் ஏற்படுவதில் இருந்து பாதங்களை காக்கிறது.
கால்களில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க துத்தநாகம் சிறந்தது. உங்களின் உடலில் சரியான அளவிற்கு துத்தநாகம் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
நீரை கொதிக்க வைத்து அதில் டீ தூளைப் போட்டு ஊறவைக்கவும். இதில் பாதங்களை மூழ்கவைத்து பின்னர் உலர்த்தலாம். இதனால் புண்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இயற்கை ஸ்கிரப்
பாதங்களை ஸ்க்ரப் கொண்டு தேய்க்கலாம். இஞ்சி, முள்ளங்கி, எலுமிச்சை ஆகியவற்றை அரைத்து பேஸ்ட் போல செய்து பாதங்களில் தேய்க்கலாம். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை செய்யவேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் உலர்ந்த காட்டன் டவலால் துடைக்கவும். கால்களை எப்போதும் உலர்வாக வைத்திருந்தாலே எந்த நோய்களும் தாக்காது.
வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை மிக்ஸ் செய்து அதில் பத்து நிமிடங்கள் கால்களை ஊறவைக்கவும். வாரத்திற்கு ஒருமுறையாவது இதை செய்வது நல்லது.
உலர்வான பாதங்கள்
சிலர் செருப்பு எதுவும் அணியாமல் வெறும் காலோடு நடப்பர். இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. செருப்பு போடும் போது, வெயிலைத் தடுக்கும் கிரீமை கால்களில் தடவ வேண்டும். கால்களுக்கு வீட்டு வைத்தியம் செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட் டிருப்போர், வருடத்திற்கு ஒரு முறை போடியாட்ரிக் மருத்துவரை அணுகுவது சிறந்தது. இல்லையென்றால், புண் மற்றும் கொப்புளம் ஏற்பட்டு, மிகப்பெரிய நோயை உண்டாக்கும்.
எப்போதும் பாதங்களை கழுவி சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பருத்தி சாக்சை பயன்படுத்துவது சிறந்தது. ஒரே ஷூவை தொடர்ந்து போடாமல், மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பாதங்களில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications