முகப்பருவால் வந்த வடு அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க...

By Maha

Skin Care
முகத்தின் அழகை கெடுப்பது முகப்பரு தான். அப்படி முகப்பரு வந்து பாதிப்பு ஏற்படுவதை விட, அவை செல்லும் போது ஏற்படும் வடுக்கள் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பருக்கள் வந்தால் நாம் கைகளை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் இப்ப குத்துதே குடையுதேன்னு சொல்லிட்டு இருக்கோம். பொதுவா நகம் பட்டாலே வடு வந்துவிடும். அதனை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் போக்க முடியும். அந்த வடுக்கள் போக சில வழிகள் இருக்கிறது.

முகப்பரு வந்தால், முதலில் ஐ‌ஸ் க‌ட்டிகளா‌ல் ஒ‌த்தட‌ம் கொடு‌த்து ‌பின் அ‌தி‌ல் கை வை‌த்தால் ந‌ல்லது. அப்படி நீக்கும் போது அதில் இருந்து வெளிவரும் வெள்ளை நிற திரவத்திற்குப் பிறகு இரத்தம் வரும். அதை துடைத்து விட்டு அப்படியே விடாமல் ஏதாவது ஒரு பே‌ஸ் க்‌ரீ‌மை போட வே‌ண்டு‌ம். இப்படி செய்யாவிட்டால் பரு வந்த இடத்தில் உள்ள துளையில் தூசிகள் போ‌ய் பெ‌ரிய பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம்.

பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் ஃபேஷ‌ிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளவே‌ கூடாது. முகப்பரு வர முதல் காரணமே சரும‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசை இருப்பதால் தான். ஏனென்றால் ஃபேஷ‌ிய‌லின் போது அ‌திக‌மாக எ‌ண்ணெ‌ய் பசை உள்ள ‌க்‌ரீ‌ம்க‌ளையே பயன்படுத்துவார்கள். இது அவர்களது சரும‌த்தை மேலு‌ம் ‌சி‌க்கலா‌க்கு‌ம். வேண்டுமென்றால் இவர்கள் ‌ப்‌ளீ‌ச் செய்து கொள்ளலாம். ‌ப்‌ளீ‌ச் செய்யும்போது முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌ய் பசை தான் நீக்கப்படுகிறது. எனவே ப்ளீச் செய்து கொள்வது நல்லது.

சிலருக்கு முகத்தில் அதிக பருக்கள் வந்து கையை வைக்க முடியாத அளவிற்கு வலி இருக்கும். அப்படி இருப்பவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. ஏனென்றால் அழகுக் கலை நிபுணர்களை விட, தோல் மருத்துவருக்கே சருமத்தைப் பற்றியும், என்ன பிரச்சனையென்றும் நன்கு தெரியும்.

இவ்வாறெல்லாம் செஞ்சு பாருங்க, வடு வராமல் முகம் அழகோடும் பொலிவோடும் இருக்கும்.

Story first published: Wednesday, May 30, 2012, 17:54 [IST]
Desktop Bottom Promotion