Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
கவர்ச்சியான கண் அழகைப் பெற ஆசையா?

கவர்ச்சியான கண் அழகைப் பெற...
1. கண் அழகாக பெரிதும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும் காய்கனிகளான கேரட், ஆரஞ்சு, பால், திராட்சை, முட்டை, முன் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியமுடனும், அழகுடனும் இருக்கும்.
2. இரவில் படுக்கும் முன், கண்களுக்கு மை தீட்டும் பழக்கம் உள்ளவர்கள் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இல்லாவிட்டால் கண் மையில் இருக்கும் இரசாயப் பொருட்கள் கண்களில் தங்கி கெடுதலை ஏற்படுத்தும்.
3. வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது, மறக்காமல் முகத்தையும், கண்களையும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். அப்படி செய்தால் முகத்தில் மற்றும் கண்களில் இருக்கும் தூசிகள் வெளியேறி கண்கள் பாதுகாப்புடன் இருக்கும்.
4. கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க, வெள்ளரிக்காயின் சதைப்பகுதியை எடுத்து கண்களை மூடிக் கொண்டு வைத்து, 10 நிமிடம் கழித்து எடுத்து விடவும். இதனை தினமும் செய்து வந்தால், கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு சோர்வு இல்லாமல், கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் கருவளையமும் நீங்கும்.
5. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், கண்கள் சோர்வடையும் நேரத்தில் 10 நிமிடம் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்து, பின் வேலை செய்தால் கண்கள் புத்துணர்ச்சிப் பெறும்.
பொதுவாக பெண்களுக்கு முகப் பொலிவை கண்கள் தான் காட்டும். ஆகவே அத்தகைய கண்களை அலட்சியமாக எண்ணாமல், சரியான முறையில் கண்களை பராமரித்தால் முக அழகானது இன்னும் மெருகேறும்.



Click it and Unblock the Notifications