Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா?

எலுமிச்சை வைத்தியம்
கை விரல்களின் கருமை போக்குவதில் எலுமிச்சை மிகவும் சிறந்தது. தினமும் எலுமிச்சையை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை கை விரல்களில் தேய்க்கவும் பளிச் தோற்றம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சீனி சேர்த்து கலந்து அதனை கை முட்டிகளில் பூசி நன்றாக ஸ்கரப் கொண்டு தேய்க்கவேண்டும். பின்னர் மாய்ச்சரைசர் பூசவும். வாரம் ஒருமுறை ரெகுலராக செய்து வர கருமை காணமல் போகும்.
வெது வெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து கைகளை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் மென்மையான துணியில் கைகளை துடைக்க வேண்டும். இதனால் கைகள் மென்மையாகும், நகங்கள் பளிச் ஆகும்.
பால் ஏடு, ரொட்டித் துண்டுகள்
பால் ஏடு எடுத்து அதனை கை விரல்களில் மென்மையாக பூசி மசாஜ் செய்யவேண்டும். பின்னர் எலுமிச்சை தோல் கொண்டு அந்த இடத்தை நன்றாக தேய்த்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப்போன்ற கைகளும், கை முட்டிகளில் கருமையும் மறையும்.
ரொட்டித் துண்டுகளை நைசாக உதிர்த்து அதனுடன் பால் கலந்து கருமையாக உள்ள இடங்களில் அப்ளை செய்யவும். பின்னர் தேய்த்து கழுவ கருமை மறையும்.
கைகளின் கருமை போக்குவதில் தயிர் சிறந்த பொருள். சிறிதளவு கெட்டித் தயிர் எடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ விரல்கள் பளிச் தோற்றம் தரும்.
ஆலிவ் எண்ணெய்
கோதுமை மாவு ஒரு ஸ்பூன் பால் ஏடு அல்லது எலுமிச்சை சாறு கலந்து முட்டிகளில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் கழுவினால் மென்மையாகும்.
இரவு நேரத்தில் தூங்கும் போது கைகளில் ஆலிவ் ஆயில் பூசலாம். காலை நேரத்தில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ கைகள் மென்மையாகும். நகங்கள் உடையாமல் பாதுகாக்க சிறிது வெண்ணெய் தடவினால் நகங்கள் உறுதியாகும்.
மேற்கூறப்பட்ட முறைகளில் தினசரி ஏதாவது ஒரு முறையை பின்பற்றி கைவிரல்களை கவனித்தால் விரல் முட்டிகளில் கருமை மறையும்.



Click it and Unblock the Notifications