Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
கொளுத்தும் கோடையில் கூலா இருக்க டிப்ஸ்!

தலைக்கு குளிங்க
மத்த சீசன் காலங்களில் எப்படியோ கோடையில் கண்டிப்பாக தினசரி தலைக்கு குளிங்க அப்பொழுதுதான் கோடை வெயிலை சமாளிக்க முடியும். சூரிய ஒளி நேரடியாக தலைமீது நேரடியாக படுவதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடு ஏறுகிறது. எனவே தலைக்கு குளிப்பதன் மூலம் உடம்பில் உள்ள சூடு குறையும் உடலும் குளிர்ச்சியாகும். கண்களும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
பாதங்களை ஊறவையுங்கள்
கோடை காலத்தில் தினசரி இருமுறை குளிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இருவேளை குளிக்க முடியாவிட்டாலும் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பாத்ரூமிற்குள் போய் பாதங்களை ஊறவையுங்கள். இதனால் உடம்பில் உள்ள உஷ்ணம் காது வழியாக வெளியேறுவதை கண் கூடாக காண்பீர்கள். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடம்பில் கழுத்தும் தோள்பகுதியும் சந்திக்கும் பாகத்தில் குளிர்ச்சி அதிகம் இருக்கும். அந்த இடத்தில் சில துளிகள் ஜில் தண்ணீரை சொட்டு விடுங்களேன் உடம்பின் மொத்த பகுதியும் கூல் ஆகிவிடுவதை உணர்வீர்கள். உங்களின் காது வழியே மொத்த உஷ்ணமும் வெளியேறுவதை கண்கூடாக காண்பீர்கள்.
களிமண் பேக்
கோடை காலத்தில் உடலின் உஷ்ணத்தை வெளியேற்றுவதில் களிமண்ணிற்கு முக்கிய பங்குண்டு. இது கோடைகால கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. கடைகளில் விற்கப்படும் முல்தானி மெட்டி எனப்படும் களிமண் வாங்கி அதை நன்கு குழைத்து முகம் மற்றும் சருமத்தில் வெயில் படும் இடங்களில் பேக் போடவும். காய்ந்த பின்னர் ஊறவைத்து கழுவ உடல் குளிர்ச்சியடையும் சருமம் பாதுகாக்கப்படும்.
பன்னீர் சந்தனம்
கோடை காலத்தில் ரசாயனங்கள் அடங்கிய சன்ஸ்கிரீன் லோசன் உபயோகிப்பதால் சருமத்தில் இருந்து வியர்வை வெளியேறுவது தடை பட்டு உடல் மேலும் உஷ்ணமடையும்கி. இதனை தவிர்க்க இயற்கை லோசன்களை உபயோகிக்கலாம். பன்னீரில் சந்தனம் கரைத்து அதை உடல் முழுவதும் பூசுங்கள். இதனால் உடல் குளுமையடைவதோடு சருமம் பொலிவு பெறும்.
குளிர்ச்சியான உணவுகள்
கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ணுங்கள். வெள்ளரி, தர்பூசணி போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்களையும், யோகர்டு, தண்ணீர் போன்றவைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் உடலில் நீர்சத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. இதனால் உடலும் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் அடைகிறது. இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் கோடை காலத்தில் நீங்களும் அழகு ராணிதான்.



Click it and Unblock the Notifications











