கொளுத்தும் கோடையில் கூலா இருக்க டிப்ஸ்!

By Mayura Akilan

அக்னி நட்சத்திரம் முடிஞ்சாச்சு ஆனாலும் அனல் தாங்கலையே என்று புலம்பும் நபரா நீங்கள்? கவலை வேண்டாம் கொளுத்தும் கோடையிலும் உங்கள் உடலை கூலா வச்சிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். கோடையில் வேர்த்து ஊத்தினாலும் ஒரு சிலர் மட்டும் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல எப்பவும் புத்துணர்ச்சியோட இருப்பார்கள் இதற்கு காரணம் கோடையில் அவர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்களும் இயற்கை அழகு சாதனப் பொருட்களும்தான். நீங்களும் கோடையில் கூல் அழகுடன் திகழ அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

தலைக்கு குளிங்க

மத்த சீசன் காலங்களில் எப்படியோ கோடையில் கண்டிப்பாக தினசரி தலைக்கு குளிங்க அப்பொழுதுதான் கோடை வெயிலை சமாளிக்க முடியும். சூரிய ஒளி நேரடியாக தலைமீது நேரடியாக படுவதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடு ஏறுகிறது. எனவே தலைக்கு குளிப்பதன் மூலம் உடம்பில் உள்ள சூடு குறையும் உடலும் குளிர்ச்சியாகும். கண்களும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

பாதங்களை ஊறவையுங்கள்

கோடை காலத்தில் தினசரி இருமுறை குளிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இருவேளை குளிக்க முடியாவிட்டாலும் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பாத்ரூமிற்குள் போய் பாதங்களை ஊறவையுங்கள். இதனால் உடம்பில் உள்ள உஷ்ணம் காது வழியாக வெளியேறுவதை கண் கூடாக காண்பீர்கள். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடம்பில் கழுத்தும் தோள்பகுதியும் சந்திக்கும் பாகத்தில் குளிர்ச்சி அதிகம் இருக்கும். அந்த இடத்தில் சில துளிகள் ஜில் தண்ணீரை சொட்டு விடுங்களேன் உடம்பின் மொத்த பகுதியும் கூல் ஆகிவிடுவதை உணர்வீர்கள். உங்களின் காது வழியே மொத்த உஷ்ணமும் வெளியேறுவதை கண்கூடாக காண்பீர்கள்.

களிமண் பேக்

கோடை காலத்தில் உடலின் உஷ்ணத்தை வெளியேற்றுவதில் களிமண்ணிற்கு முக்கிய பங்குண்டு. இது கோடைகால கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. கடைகளில் விற்கப்படும் முல்தானி மெட்டி எனப்படும் களிமண் வாங்கி அதை நன்கு குழைத்து முகம் மற்றும் சருமத்தில் வெயில் படும் இடங்களில் பேக் போடவும். காய்ந்த பின்னர் ஊறவைத்து கழுவ உடல் குளிர்ச்சியடையும் சருமம் பாதுகாக்கப்படும்.

பன்னீர் சந்தனம்

கோடை காலத்தில் ரசாயனங்கள் அடங்கிய சன்ஸ்கிரீன் லோசன் உபயோகிப்பதால் சருமத்தில் இருந்து வியர்வை வெளியேறுவது தடை பட்டு உடல் மேலும் உஷ்ணமடையும்கி. இதனை தவிர்க்க இயற்கை லோசன்களை உபயோகிக்கலாம். பன்னீரில் சந்தனம் கரைத்து அதை உடல் முழுவதும் பூசுங்கள். இதனால் உடல் குளுமையடைவதோடு சருமம் பொலிவு பெறும்.

குளிர்ச்சியான உணவுகள்

கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ணுங்கள். வெள்ளரி, தர்பூசணி போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்களையும், யோகர்டு, தண்ணீர் போன்றவைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் உடலில் நீர்சத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. இதனால் உடலும் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் அடைகிறது. இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் கோடை காலத்தில் நீங்களும் அழகு ராணிதான்.

Story first published: Tuesday, May 29, 2012, 16:42 [IST]
Desktop Bottom Promotion