Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
கொளுத்தும் கோடையில் கூலா இருக்க டிப்ஸ்!

தலைக்கு குளிங்க
மத்த சீசன் காலங்களில் எப்படியோ கோடையில் கண்டிப்பாக தினசரி தலைக்கு குளிங்க அப்பொழுதுதான் கோடை வெயிலை சமாளிக்க முடியும். சூரிய ஒளி நேரடியாக தலைமீது நேரடியாக படுவதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடு ஏறுகிறது. எனவே தலைக்கு குளிப்பதன் மூலம் உடம்பில் உள்ள சூடு குறையும் உடலும் குளிர்ச்சியாகும். கண்களும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
பாதங்களை ஊறவையுங்கள்
கோடை காலத்தில் தினசரி இருமுறை குளிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இருவேளை குளிக்க முடியாவிட்டாலும் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பாத்ரூமிற்குள் போய் பாதங்களை ஊறவையுங்கள். இதனால் உடம்பில் உள்ள உஷ்ணம் காது வழியாக வெளியேறுவதை கண் கூடாக காண்பீர்கள். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடம்பில் கழுத்தும் தோள்பகுதியும் சந்திக்கும் பாகத்தில் குளிர்ச்சி அதிகம் இருக்கும். அந்த இடத்தில் சில துளிகள் ஜில் தண்ணீரை சொட்டு விடுங்களேன் உடம்பின் மொத்த பகுதியும் கூல் ஆகிவிடுவதை உணர்வீர்கள். உங்களின் காது வழியே மொத்த உஷ்ணமும் வெளியேறுவதை கண்கூடாக காண்பீர்கள்.
களிமண் பேக்
கோடை காலத்தில் உடலின் உஷ்ணத்தை வெளியேற்றுவதில் களிமண்ணிற்கு முக்கிய பங்குண்டு. இது கோடைகால கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. கடைகளில் விற்கப்படும் முல்தானி மெட்டி எனப்படும் களிமண் வாங்கி அதை நன்கு குழைத்து முகம் மற்றும் சருமத்தில் வெயில் படும் இடங்களில் பேக் போடவும். காய்ந்த பின்னர் ஊறவைத்து கழுவ உடல் குளிர்ச்சியடையும் சருமம் பாதுகாக்கப்படும்.
பன்னீர் சந்தனம்
கோடை காலத்தில் ரசாயனங்கள் அடங்கிய சன்ஸ்கிரீன் லோசன் உபயோகிப்பதால் சருமத்தில் இருந்து வியர்வை வெளியேறுவது தடை பட்டு உடல் மேலும் உஷ்ணமடையும்கி. இதனை தவிர்க்க இயற்கை லோசன்களை உபயோகிக்கலாம். பன்னீரில் சந்தனம் கரைத்து அதை உடல் முழுவதும் பூசுங்கள். இதனால் உடல் குளுமையடைவதோடு சருமம் பொலிவு பெறும்.
குளிர்ச்சியான உணவுகள்
கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ணுங்கள். வெள்ளரி, தர்பூசணி போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்களையும், யோகர்டு, தண்ணீர் போன்றவைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் உடலில் நீர்சத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. இதனால் உடலும் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் அடைகிறது. இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் கோடை காலத்தில் நீங்களும் அழகு ராணிதான்.



Click it and Unblock the Notifications