Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
மழைக்காலத்து முடி கொட்டாம இருக்கவும் பட்டுபோன்ற பளபளப்பான கூந்தலை பெறவும் இந்த பேக்கை யூஸ் பண்ணுங்க!
Hair Packs For Monsoon In Tamil: பருவமழையின் போது முடி உதிர்தல் அல்லது வறண்ட முடி தொடர்பான பிற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். ஒவ்வொரு பருவகாலமும் நம் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதிக ஈரப்பதம் காரணமாக, மழைக்காலங்களில் முடி உதிர்வது மிகவும் பொதுவானதாக இருக்கிறது. மழைக்காலத்தில் ஈரப்பதமான சூழ்நிலைகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் இனப்பெருக்கம் செய்யும் இடத்தையும் உருவாக்கலாம். நீங்கள் அதை அறிவதற்கு முன்பே, பொடுகு மற்றும் பிற முடி பிரச்சனைகள் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும்.

உச்சந்தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளும் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். மேலும் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டிய நேரம் இது. ஆனால் மழைக்கால முடி பராமரிப்புக்கு, நீங்கள் எப்போதும் வீட்டு வைத்தியத்தை நம்பலாம். வலுவான மற்றும் மென்மையான கூந்தலுக்கு மழைக்காலத்தில் நீங்கள் வீட்டில் முயற்சி செய்யக்கூடிய ஹேர் பேக்குகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஹேர் பேக்குகள் என்றால் என்ன?
ஏராளமான முடி பராமரிப்பு பொருட்கள் சந்தையில் உங்களுக்கு கிடைக்கின்றன. ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் பல பெண்களின் அழகு அலமாரியை ஆக்கிரமித்து இருக்கின்றன. ஹேர் பேக் ஒரு தீவிர கண்டிஷனர் என்பதால் உங்கள் அழகு முறையின் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும். உங்கள் முடியின் இழைகளில் ஆழமாக ஊட்டவும், ஹைட்ரேட் செய்யவும் ஹேர் பேக் சிகிச்சை செய்ய வேண்டும்.
புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டமளிக்கும் எண்ணெய்களால் நிரம்பிய ஹேர் பேக்குகள் அடர்த்தியாகவும், கிரீமியாகவும் இருக்கும். அவை பொதுவாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை நீண்ட காலத்திற்கு முடியில் இருக்கும்படி செய்யப்படுகின்றன. இயற்கையான ஹேர் பேக்குகள் உலர்ந்த, சேதமடைந்த அல்லது ரசாயனம் கலந்த முடி உள்ளவர்களுக்கு ஏற்றது.
வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மற்றும் வாழைப்பழத்தை ஹேர் பேக்காக பயன்படுத்தலாம். வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் பிசைந்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். வேர்களில் மட்டுமல்லாது முடியின் முனைகளிலும் நன்றாக தடவ வேண்டும்.
பின்னர், 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் கழித்து, தலைமுடியை லேசான ஷாம்பூ கொண்டு அலச வேண்டும். மழைக்காலத்தில் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும்போது, முடி உதிர்வதைக் குறைக்கலாம். மேலும், பளபளப்பை அதிகரிக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம்.
அலோ வேரா ஜெல், எலுமிச்சை மற்றும் தேயிலை மர எண்ணெய்
புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 3 முதல் 4 துளிகள் தேயிலை மர எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் பயன்படுத்தி, அரை மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். இந்த கலவையானது முடிக்கு புத்துணர்ச்சியை அளிக்கும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் முடி வளர்ச்சியைத் தூண்டும்.
கற்றாழையின் ஈரப்பதமூட்டும் பண்புகள் ஈரப்பதத்தையும் பிரகாசத்தையும் மீட்டெடுக்கின்றன. அதே நேரத்தில் எலுமிச்சையின் இயற்கையான அமிலத்தன்மை எண்ணெயை சமன் செய்கிறது. தேயிலை மர எண்ணெயில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராடி, உங்கள் தலைமுடியை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.
அலோ வேரா ஜெல்
இது ஒரு ஒற்றை மூலப்பொருள் ஹேர் பேக் ஆகும். இதற்காக நீங்கள் புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட கற்றாழை ஜெல்லை மட்டும் பயன்படுத்தினால் போதும். உச்சந்தலையில் மற்றும் முடியின் முனைகளில் கற்றாழை ஜெல்லை நன்றாக தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து, முடியை தண்ணீரில் அலச வேண்டும். உங்கள் தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்ற, கற்றாழை ஜெல் ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
அவகேடா மற்றும் ஆலிவ் எண்ணெய்
ஒரு பழுத்த அவகேடா பழத்தை நன்றாக மசித்து கொடுத்துக்கொள்ளவும், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை அதில் சேர்த்து, அதன் முனைகளில் கவனம் செலுத்தி ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அவகேடா பழத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் முடியின் தண்டுக்குள் ஊடுருவி, முடியை ஈரப்பதமாக்கி ஊட்டமளித்து, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
தேன் மற்றும் தயிர் ஹேர் பேக்
மென்மையான மற்றும் ஆரோக்கியமான முடி வேண்டுமா? உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் தேன் மற்றும் தயிர் ஹேர் பேக்கை சேர்க்க வேண்டும். ஒரு அரை கப் வெற்று தயிரில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். 30 முதல் 60 நிமிடங்கள் கழித்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.
முட்டை ஹேர் பேக்
ஒரு கிண்ணத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை ஒன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை நன்றாக கலந்து, அந்த கலவையை ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, முடியை தண்ணீரில் அலச வேண்டும். இது உங்கள் தலைமுடிக்கு மிகவும் பயனுள்ள புரத சிகிச்சையாகும்.
சேதமடைந்த முடியை சரிசெய்து வளர்க்கவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் முடியை மாற்றவும் இந்த ஹேர் பேக் உதவும். இந்த இயற்கையான ஹேர் பேக்குகளை பயன்படுத்துவதன் மூலம், இந்த பருவமழையில் உங்கள் முடியை பற்றி கவலைபடுவதை நிறுத்தலாம்.



Click it and Unblock the Notifications












