Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
கர்ப்பக்கால ஸ்கின் பிரச்சனைகளை சமாளிக்க டிப்ஸ்...
கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு உயிரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல அது, பெண்கள் மறு ஜென்மத்துக்காகத் தயாராகும் ஒரு செயலும்தான். பெண்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று தாய்மை. மிகவும் உன்னதமாக பார்க்கப்படுகிற இந்த விஷயத்த்தினால் பெண்கள் தாய்மைப் பேறு அடைவதாலேயே ஒரு பெண் முழுமையடைகிறாள் என்றும் சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட இந்த கர்ப்ப காலத்தில் பெண் குழந்தையை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏராளமான மாற்றங்களை சந்திப்பார்கள். வாழ்க்கையில் புதுமையான அனுபவத்தை சந்திக்கும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்களும் உண்டு அதே சமயம் அதனை கையாளத் தெரியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவர்.

அந்த சமயத்தில் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சருமப் பிரச்சனைகள் தோன்றிடும். அதற்கு சிகிச்சையளிக்கும் வகையில் பல்வேறு அழகுசாதன பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது இவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்துவதினால் குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை வருமா? எந்த கெமிக்கலும் சேர்க்காத இயற்கையான பொருட்களை வைத்து கர்ப்பிணிப்பெண்களுக்கான சில அழகு குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
1. சருமத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியது இந்த கற்றாழை ஜெல். இதிலிருக்கும் அற்புதமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவிடும். இது எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதனை எளிதாக வீட்டிலேயே கூட தயாரிக்கலாம். அலர்ஜி அல்லது வேறு ஏதேனும் சருமப்பிரச்சனை இருக்கும் இடங்களில் இந்த ஜெல்லை எடுத்து தடவுகள். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம்.
2. பெண்கள், தங்கள் வயிறு, மார்பு உள்ளிட்ட சருமத்தில் தடவும் பொருள்களில் என்னென்ன கலந்துள்ளது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் அவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்து பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.
3. கர்ப்பிணிகளின் சருமம் மிகவும் சென்ஸிட்டிவ் என்பதால், அவர்கள் வேக்ஸ் செய்யக் கூடாது. செண்ட்டுகளையும் பயன்படுத்தக்கூடாது..
4. கர்ப்ப காலத்தில் முகப்பரு வெடிப்புகள், தழும்புகள், பெரிய அளவிலான முகப்பருக்கள் தோன்றுவது போன்றவை இயல்பானது. இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் பொழிவான சருமத்தை பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால், எண்ணெய் இல்லாத க்ளென்சரைக் கொண்டு உங்கள் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும். வறட்சியான சருமம் கொண்டவர்கள் காமெடோஜெனிக் அல்லாத ஃபேஸ் வாஷ்களைத் தேர்ந்தெடுக்கவும்.
5. சருமத்தில் வெவ்வேறு நிற மாற்றங்கள் உண்டாகியிருந்தால் அதனை போக்க இதனை முயற்சிக்கலாம். வெள்ளரியை அதன் விதைகளை நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மைய அரைத்த அந்த விழுதுடன் பால் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். இதனால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
6. சருமத்தின் மீது கடுமையாக செயலற்றக்கூடிய சோப்புகளை பயன்படுத்துவது, தோலில் உள்ள எண்ணெய்யை அகற்றக்கூடும். எனவே மென்மையான சோப்புக்கள் அல்லது மாய்ஸ்சரைசிங் பாடி வாஷ்களை பயன்படுத்தலாம்.
7. சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க விட்டமின் இ என்கிற சத்து மிகவும் அவசியமாகும். உங்கள் உடலில் விட்டமின் இ குறைந்தால் கூட சருமத்தில் அதன் பாதிப்புகள் தெரியும். இச்சமயத்தில் சருமத்திற்கு மட்டும் என்னென்ன க்ரீம்கள்,ஜெல் அப்ளை செய்துவந்தால் மட்டும் சருமம் பொலிவடையாது. சருமத்திற்கு தேவையான சத்துக்களையும் நாம் கொடுக்க வேண்டும். அதனால் அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் விட்டமின் இ இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
8. பப்பாளி சருமத்திற்கு மிகவும் நல்லது. பப்பாளிப் பழத்தில் இருக்கும் சத்துக்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரண்டு டீஸ்ப்பூன் பப்பாளி பழக்கூழுடன் ஒரு டீஸ்ப்பூன் தேன் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடுங்கள். 15 நிமிடங்களில் நன்றாக காய்ந்ததும் கழுவிவிடலாம். வரண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமைந்திடும்.
9. நம்முடைய சருமம் வரண்டுவிடாமல் பாதுகாத்து வந்தாலே பல்வேறு தோல் நோய்களிலிருந்து தப்பிக்கலாம். சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்க வேண்டுமானால் போதுமான அளவு தண்ணீர் சத்து அவசியம். அதனால் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், தண்ணீரைத் தவிர இயற்கையான பழச்சாறுகள்,சூப்,இளநீர்,போன்றவை குடிக்கலாம்.
10. சந்தனம் மிகவும் குளிர்ச்சியானது. இதனை சூடான நீரில் கலந்து கொள்ளலாம் அல்லது இரண்டு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் தோன்றும் நிறமாற்றங்களை போக்கிடும். அதே சமயம் முகத்தை எப்போதும் ஃபிரஷ்ஷாக வைத்திருக்க உதவிடும்.



Click it and Unblock the Notifications