Latest Updates
-
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும்
இந்த 4 ராசிக்காரங்க அவங்க கணவரோட எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணமான அனைவருமே எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருந்து விடுவதில்லை. அனைத்து தம்பதிகளுமே ஏதாவது ஒரு கட்டத்தில் தங்களுக்குள் சண்டை போட்டு கொள்வார்கள் அல்லது வாக்குவாதம் செய்வார்கள். ஆனால் விதிவிலக்காக சிலர் தங்கள் காதல் அல்லது திருமண உறவில் அளவிற்கு அதிகமாக சண்டை போடுபவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக உக்கிரமானவர்கள், பிடிவாதமானவர்கள் அல்லது உணர்ச்சிரீதியாக தீவிரமானவர்களாக இருப்பார்கள். இது அவர்கள் உறவுகளில் புயலை ஏற்படுத்தும் மற்றும் எப்போதும் அவர்களின் திருமண உறவை பதட்டமாக வைத்திருக்கும்.
இவர்கள் அதிகமாக சண்டையிடுவதால் அவர்கள் உறவை அழிப்பதாக அர்த்தமல்ல, அவர்கள் எவ்வளவு சண்டை போடுகிறார்களா அவ்வளவு காதலிக்கவும் செய்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் வாழ்க்கைத்துணையுடன் மோசமாக சண்டை போடுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
கிரகங்களின் தளபதியான செவ்வாயால் ஆதிக்கம் செலுத்தும் மேஷ ராசிக்காரர்கள், அதீத ஆற்றல் மற்றும் ஆர்வம் நிறைந்தவர்கள். அவர்கள் தங்கள் துணையை ஆழமாக நேசிக்கிறார்கள், ஆனால் அவர்களின் கோபம் பெரும்பாலும் மோசமான வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். மேஷ ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த விரும்ப மாட்டார்கள், எனவே அவர்கள் துணை ஏதாவது ஒரு விஷயம் அவர்களைத் தொந்தரவு செய்தால், அதை உடனடியாக வெளிப்படையாக சொல்வார்கள், அது அவர்களை காயப்படுத்தினாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
இந்த வெளிப்படையான இயல்பு அமைதியான விவாதங்களை விரும்புபவர்களுக்கு எளிதில் சண்டைகளைத் தூண்டும். இருப்பினும், மேஷத்தின் நல்ல அம்சம் என்னவென்றால், அவர்கள் நீண்ட நேரம் வெறுப்புணர்வை வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அடிக்கடி சண்டையிடலாம், ஆனால் அவர்கள் விரைவாக சமரசம் செய்து கொள்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தொடர்ச்சியான கவனத்தை விரும்புவார்கள், மேலும் ஒரு உறவில் பாராட்டப்படுவதை உணர விரும்புகிறார். அவர்களின் துணை அவர்களுக்கு போதுமான அங்கீகாரம் வழங்காதபோது, வாக்குவாதங்கள், சண்டைகள் எழுகின்றன. சிம்ம ராசிக்காரர்கள் தற்பெருமை கொண்டவர்கள், மோதல்களின் போது அவர்கள் பின்வாங்குவதை விரும்ப மாட்டார்கள், அவர்களின் இந்த ஆளுமை சிறிய பிரச்சினைகளை மிகப்பெரியதாக மாற்றும்.
அவர்களின் உக்கிரமான ஆளுமை பெரும்பாலும் கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இருப்பினும், அவர்களின் விசுவாசம் என்பது சண்டைகள் அன்பையும், மரியாதையையும் விரும்புவதிலிருந்து வருகின்றன, மாறாக அக்கறையின்மையால் ஏற்படுவதில்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் காதலை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், எனவே அவர்கள் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் துரோகம் செய்யப்பட்டதாகவோ, பொறாமைப்பட்டதாகவோ அல்லது புறக்கணிக்கப்பட்டதாகவோ உணரும்போது, அவர்களின் எதிர்வினை மிகவும் வலுவாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களின் சண்டைகள் மிகவும் தீவிரமாக இருக்கும், ஏனென்றால் அவர்கள் உணர்வுகளை ஆழமாக தோண்டி எடுப்பார்கள், தங்கள் கோபத்தை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
அவர்கள் எல்லாவற்றிற்கும் நேர்மையையும், விசுவாசத்தையும் விரும்புகிறார்கள், அதில் குறைவு ஏற்படும் போது அவர்கள் பெரிய சண்டையை துவங்கலாம். இதிலுள்ள நல்ல விஷயம் என்னவெனில் ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் அவர்களின் காதல் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்கு மிகவும் அமைதியாகத் தெரிந்தாலும், காதல் விஷயத்தில் அவர்கள் மிகவும் தீவிரமானவர்களாக இருப்பார்கள், அவர்கள் தங்கள் உறவில் தீவிர விசுவாசத்தையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் பிடிவாதமான தன்மை அவர்களை சண்டையின் போது உறுதியாக நிற்க வைக்கிறது, அவர்கள் ஒருபோதும் சண்டையிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
இது அவர்களின் துணையுடன் நீண்ட கால கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். மகர ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள், எனவே அவர்கள் துணையிடம் பொறுப்பின்மையை உணர்ந்தால் அவர்கள் சண்டைகளை உருவாக்குவார்கள். அவர்களின் சண்டையால் ஏற்படும் நன்மை என்னவெனில், அவர்களின் சண்டைகள் பொதுவாக உறவின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புவதிலிருந்து வருகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
