Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
சூரியனும்-புதனும் கன்னி ராசியில் இணைவதால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை, அதனால்தால் கிரகங்களின் அனைத்து இயக்கங்களும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் தொடர்ந்து தங்கள் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றன. ஜோதிட உலகில் சூரியனும், புதனும் தங்கள் நிலையை மிகவும் வேகமாக மாற்றிக்கொள்ளும் கிரகங்களாகும், செப்டம்பர் மாதத்தில் சூரியனும்-புதனும் ஒரு சக்திவாய்ந்த நல்ல இணைப்பை உருவாக்குகிறது.
செப்டம்பர் 15, 2025 அன்று, புதன் கன்னி ராசியில் காலை 10:58 மணிக்குப் பயணிக்கிறது. பின்னர், செப்டம்பர் 17, 2025 அன்று, சூரியன் கன்னி ராசியில் காலை 01:38 மணிக்குப் பயணிக்கிறது. இதன் விளைவாக கன்னி ராசியில் சூரியன்-புதன் சேர்க்கை உருவாகிறது.

ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறது, மேலும் அது தலைமைத்துவம், உயிர்ச்சக்தி மற்றும் மன உறுதியைக் குறிக்கிறது. இது ஒருவரின் அடையாளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் சமூகத்தில் அங்கீகாரத்தை பெற உதவுகிறது. அதேசமயம் புதன் மக்களின் தொடர்பு கொள்ளும் திறன், தகவமைப்பு மற்றும் பகுத்தறிவு சக்தியைக் குறிக்கிறது. ஒரு ராசியில் சூரியனும் புதனும் இணைவது புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
கன்னி ராசியில் சூரியன்-புதன் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். எளிமையான மற்றும் வெளிப்படையான நகர்வுகள் அவர்கள் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க முடியும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானம் அதிகரிக்கும், இதனால் பொருளாதார நிலை உயரும். அவர்களின் கடின உழைப்புக்கான பலன்களும், அங்கீகாரமும் கிடைக்கும்.
அவர்களின் கடந்த கால முயற்சிகளுக்கு அலுவலகத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடலாம் மற்றும் கடந்த கால பிரச்சனைகளை திறமையாக தீர்க்கலாம். அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய ஒருவரை சந்திக்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சனையையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன்-புதன் இணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் நேர்மறையான பலன்களை அளிக்கும். பணியிடத்தில் நற்பெயரைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதற்கேற்ப தொழில்முறை நகர்வுகளைத் திட்டமிடலாம். அவர்கள் துணையுடன் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பயணம் செய்யலாம், இது பெரும் வெற்றியைத் தரும். அவர்களின் தடைபட்ட பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
கன்னி ராசியில் சூரியன்-புதன் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து நீங்கள் சிறப்பாக சம்பாதிக்கலாம். வியபாரத்தை விரிவாக்கும் முயற்சிகளுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் இப்போது விரும்பிய வேலையைப் பெறுவார்கள். அவர்களின் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடலாம் மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவும். சமூகத்தில் அங்கீகாரம் மற்றும் மரியாதை பல மடங்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில், உங்கள் பேச்சாற்றல் பெரிதும் மேம்படும், அதே நேரத்தில் அவர்களின் நிதி நிலை வலுவடையும். மொத்தத்தில் இது அவர்கள் வாழ்க்கையின் பொற்காலமாக இருக்கும்.
கும்பம்
கன்னி ராசியில் சூரியன்-புதன் இணைவு கும்ப ராசிக்காரர்களின் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கும். புதாதித்ய ராஜயோகம்கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் திடீர் பண ஆதாயங்களையும் தரும். அவர்கள் வேலை வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், மேலும் அலுவலகத்தில் மேலாதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும் ஒரு புதிய வேலையைப் பெறலாம்.
திருமணமாகாதவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான திருமண வரன்களைப் பெறலாம். பல்வேறு துறைகளில் உள்ள அவர்கள் உறவினர்களின் ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












