50 ஆண்டுகள் கழித்து இருமடங்கு சக்திபெறும் சனி: செப்டம்பர் 27 முதல் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..

Shani Dev Become More Powerful On 27 September 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் இருமடங்கு சக்தி பெற்று பயணிக்கும். அவ்வாறு கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி இருமடங்கு சக்தியுடன் பயணிக்கவுள்ளார். ஏனென்றால் சூரியனின் பார்வை சனியின் மீது விழப் போகிறது.

Shani Dev Become More Powerful On 27 September 2025 List Of Lucky Zodiac Signs

இதனால் சனி பகவான் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் இரட்டிப்பு சக்தி பெற்று பயணிக்கவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வெற்றியும், பணமும் குவியப் போகிறது. இப்போது சனி பகவான் இரட்டிப்பு சக்தி பெறுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

சனி பகவான் இருமடங்கு சக்தி பெற்று பயணிப்பதால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதைப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் நல்ல உயரத்தை அடைவீர்கள். தொழிலதிபர்கள் புதிதாக முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

மிதுனம்

சனி பகவான் இருமடங்கு சக்தி பெற்று பயணிப்பதால் மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அதாவது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

சனி பகவான் இருமடங்கு சக்தி பெற்று பயணிப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்களும் தேடி வரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையை வலுப்படுத்த முடியும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, September 23, 2025, 17:10 [IST]
Desktop Bottom Promotion