Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த இயக்கங்கள் பொதுவாக அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சனிபகவானின் ஆசீர்வாதம் ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடியதாகும்.
சனிபகவான் ஒருமுறை தனது சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும், மேலும் சனிபகவான் நட்சத்திர சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 27 ஆண்டுகள் ஆகும். அக்டோபர் மாதத்தில் சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார், இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

தற்போது சனிபகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருக்கிறார், இந்த நிலையில் அக்டோபர் 03, 2025 அன்று இரவு 09:49 மணிக்கு சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான மாற்றங்களையும் உண்டாக்குகிறது. பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் நுழைவதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவதால், கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான நன்மைகளை அடைவார்கள். அவர்கள் பல்வேறு துறைகளில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள், மேலும் அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய முடியும். சனிபகவான் கடக ராசியின் ஒன்பதாவது வீட்டிற்கு நகர்கிறார், எனவே இது கடக ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தைத் தரும்.
இந்த காலகட்டத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் தொழில் முன்னேற்றங்கள் ஏற்படலாம், அதே நேரத்தில் வியாபாரிகள் நேர்மறையான முன்னேற்றங்கள் மற்றும் நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். அவர்களின் பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும். மேலும், அவர்களின் முடிவெடுக்கும் திறன்கள் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
சனிபகவானின் நட்சத்திர மாற்றம் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர முடியும். இந்த காலகட்டத்தில் அவர்களின் பேச்சு இனிமையாகவும் கண்ணியமாகவும் மாறும், இது மக்களிடையே அவர்களின் நற்பெயர் மற்றும் புகழை அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
திருமணமான தம்பதிகள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். மேலும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் கூடிவரும். மொத்தத்தில் இப்போது அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியும், அமைதியும் நிலைத்திருக்கும்.
மீனம்
சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். கர்ம பலன்களை வழங்கும் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசித்து இந்த ராசியின் லக்ன வீட்டில் தங்குவார். இந்த காலகட்டத்தில், அவர்கள் தங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நிறைய நன்மைகளைப் பெறலாம். அவர்களின் கடின உழைப்பிற்காக மேலதிகாரிகள் மற்றும் அலுவலக சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் மகிழ்ச்சியான அணுகுமுறையால் சமூகத்தில் மரியாதை பெறுவார்கள்.
அவர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும், மேலும் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கிறது மற்றும் பொருளாதார நிலை அதிகரிக்கும். அவர்களின் சமூக உறவு வலுவடையும், மேலும் குறுகிய அல்லது நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அரசாங்க வேலைகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இப்போது அதில் ஒருபடி முன்னேறுவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












