Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
30 ஆண்டுகள் கழித்து சனி பகவான் உருவாக்கும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீரும்!
Saturn Mercury Make Navpancham Rajyog On 23 November 2025: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரும் நீதிமானாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதாவது இவர் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர். இதனால் சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமாக தெரியும்.
மேலும் சனி பகவான் நீண்ட காலம் ஒரு ராசியில் இருப்பதால், மற்ற கிரகங்களுடன் சேரும் போது, சில சமயங்களில் சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் மாத இறுதியில் புதனுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

ஜோதிடத்தின் படி, சனி பகவானும், புதனும் நவம்பர் 23 ஆம் தேதி ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருந்து, நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த நாளில் தான் புதன் துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் சனியும், புதனும் ஒருவருக்கொருவர் 9 மற்றும் 5 ஆவது வீடுகளில் இருந்து, நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் முயற்சிகள் நல்ல பாராட்டைப் பெறும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு காரணமாக முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில், நிதி மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இருப்பினும் இந்த கடைசி கட்டத்தால் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டு சூழல் அமைதியாக இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இருந்தாலும், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனி மற்றும் புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்தில் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டங்கள் நிறைவேறும். மொத்தத்தில் நிதி நிலை வலுபெறும், வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











