Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
30 ஆண்டுகள் கழித்து கும்பத்தில் சனி-புதன் இணைவதால் 2025-ல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Saturn Mercury Conjunction 2025: வேத ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும். ஏனெனில் இந்த ஆண்டில் பல முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதோடு சில கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழவுள்ளன. இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தைக் காணக்கூடும்.
பஞ்சாங்கத்தின் படி, 2025 ஆம் ஆண்டில் 2 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இரண்டு நட்பு கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இந்த சேர்க்கையானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அதுவும் கும்ப ராசியில் இந்த சேர்க்கை ஏற்படவுள்ளது.

ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசிக்கு புத்திகாரகனான புதன் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளார். இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்பதால், சில ராசிக்காரர்கள் வேலை, வியாபாரம், நிதி தொடர்பான விஷயங்களில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது சனி புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி புதன் சேர்க்கையால் 2025 ஆம் ஆண்டில் புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதன் மூலம் நிதி நிலை வலுவடையும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் பிள்ளைகள் படிப்பிலும், தொழிலிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்கப் போகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி புதன் சேர்க்கையானது வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரப்போகிறது. உறவுகள் வலுவடையும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண உதவும் பல புதிய நபர்களை சந்திப்பீர்கள். எழுத்து, ஊடகம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். சனி பகவானின் ஆசியால், இதுவரை தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் சனி புதன் சேர்க்கையால் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மேலும் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகள் வெற்றி அடையும். சனி மற்றும் புதனின் ஆசியால் வாழ்க்கையில் வெற்றியும், செல்வமும் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











