நவராத்திரி 2024: வரப்போகிற நவராத்திரியில் இந்த 3 ராசிக்காரர்கள் அளவிலா அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்களாம்...!

இந்தியாவின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றான நவராத்திரி வந்துவிட்டது. நவராத்திரி சில மாநிலங்களில் இரண்டு நாள் கொண்டாட்டமாகவும், சில மாநிலங்களில் ஒன்பது நாள் கொண்டாட்டமாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் குருபகவான், மீனம், சந்திரனின் சஞ்சாரம் பலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை வரவழைப்பதால் சிலருக்கு செல்வம் சேரும் வாய்ப்பு உள்ளது, மேலும் சிலர் வேலையிலும் படிப்பிலும் சிறந்து விளங்கும்வாய்ப்புள்ளது. அவர்களின் எதிரிகள் வீழ்ந்து அவர்களின் பலம் அதிகரிக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த நற்பலன்களை பெறப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Navaratri 2024 Horoscope Which Zodiac Signs Get Luck and Prosperity During Navaratri

மேஷம்

நவராத்திரியின் போது வியாழன் மீன ராசியில் சஞ்சரிப்பதால், அதன் பலன்கள் பெரும்பாலும் மேஷ ராசிக்காரர்களுக்குக் கிடைக்கப் போகிறது. அவர்களின் செல்வச் செழிப்பும் நற்பெயரும் உயரும் வாய்ப்புகள் அதிகம். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை உங்களை எதிரிகளாகப் பார்த்த உறவினர்கள் இப்போது உங்களுக்கு நண்பராக மாறுவார்கள். அவர்கள் உங்களை மகிழ்விக்க அதிக முயற்சி செய்வார்கள்.

நண்பர்கள் மட்டுமின்றி, உறவினர்கள் மத்தியிலும் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும். மாணவர்கள் இந்த காலகட்டத்தில் படிப்பில் சிறந்து விளங்கலாம்.

கடகம்

நவராத்திரி காலகட்டத்தில் சந்திரன் நான்காமிடத்தில் இருப்பதால் கடக ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். அவர்கள் உணர்ச்சிகரமான எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், அவர்கள் தங்கள் இலக்குகளை எளிதில் தாமதமின்றி அடையலாம். நிதி தொடர்பான சில உறுதியான முடிவுகளை எடுக்கலாம். இது அதிக லாபத்திற்கு வழிவகுக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் முழ ஆதரவைப் பெறுவீர்கள். இது வேலையில் அதிக மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும்.

குருபகவானின் நிலை சாதகமாக இருப்பதால், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். சமூகத்தில் பெயரும், புகழும் உயரும்.

சிம்மம்

சூரியன் ஐந்தாம் வீட்டில் அமர்வதால், இந்த நவராத்திரியில் சிம்ம ராசிக்காரர்கள் நற்பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் . நீண்ட நாட்களாக மனதில் நினைத்த பல காரியங்களை இப்போது சாதிக்க முடியும். அதற்காக கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும் இதனால் புதிய திறமைகள் வளரும். புதிய துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்தெந்தப் பகுதியில் முதலீடு செய்வதால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வதற்கான காலம் இது.

செவ்வாயின் நிலை சாதகமாக இருப்பதால் பல அசாதாரண காரியங்களைச் செய்யும் தைரியம் அதிகரிக்கும். இவை அனைத்தும் நிச்சயமான நேர்மறையான முடிவுகளைத் தரும். புதிய நிலம் அல்லது வாகனம் வாங்க இது சரியான நேரம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 3, 2024, 18:21 [IST]
Desktop Bottom Promotion