Latest Updates
-
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் அறிவு, பேச்சு, தொடர்பு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். புதன் ஒவ்வொரு 23 முதல் 30 நாட்களுக்கும் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் என்றும், ஒவ்வொரு பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசியிலும் தனித்துவமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது, புதன் மீன ராசியில் நிலை கொண்டுள்ளது மற்றும் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 06:55 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையும். செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசியில் புதனின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் புதன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் இந்த புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது, இது அவர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் தாங்கள் கடன் கொடுத்த பணத்தை மீட்டெடுக்கலாம் மற்றும் சேமிப்பை குறிப்பிட்ட அளவை உயர்த்த முடியும். இந்த காலகட்டத்தில் சமூகத்தில் அவர்களின் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்கும். அவர்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் அவர்களின் முயற்சிகள் பணியிடத்தில் பாராட்டப்படும்.
வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்கலாம். அவர்களின் நீண்டகால ஆசைகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களின் செயல் மற்றும் எதிர்காலத்தின் வீடான பத்தாவது வீட்டில் இந்த கிரக பெயர்ச்சி நடைபெறப்போகிறது. இந்த காலத்தில் அவர்களின் தொழில், சமூக அந்தஸ்து, அதிகாரம், புகழ் மற்றும் வாழ்க்கைத்தரம் உயரும். புதன் புத்திக்கூர்மை, வணிகம் மற்றும் பேச்சாற்றலின் அதிபதியாக இருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
புதன் பெயர்ச்சியால் அவர்கள் தொழில் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும். அவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி, உயர் பதவிகளை அடைய வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம்.
சிம்மம்
புதன் சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டிற்குப் பெயர்ச்சி அடைவதால் அவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் செல்வம் மற்றும் வசதிகள் அதிகரிக்கும். இதன் காரணமாக, வாகனங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
வணிகத்தில் புதிய யோசனைகளைச் செயல்படுத்த இது சரியான நேரமாக இருக்கும். இந்த யோகத்தால், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஒரு ஆடம்பரப் பொருளை வாங்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் ஐந்தாவது வீட்டில் புதன் பெயர்ச்சி நடைபெறுவதால் அவர்கள் சாதகமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான நன்மைகளை அடையலாம், மேலும் கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும். திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். அவர்களின் வெற்றியாலும், பொருளாதார நிலையாலும் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளைத் சரியாக முடிக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
