Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்களால் ஏற்படும் யோகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது, மேலும் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு இடம்பெயர்கின்றன. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு அவை தொடர்ந்து நகர்வது சுப அல்லது அசுபமான காலத்தை உருவாக்குகிறது.
தற்போது சுக்கிரன் மேஷ ராசியில் அமைந்துள்ளது, மேலும் 29 ஜூன் 2025 அன்று, சுக்கிரன் ரிஷப ராசிக்கு நகர்ந்து மாளவ்ய ராஜ்யோகத்தை உருவாக்குகிறார். இந்த மாளவ்ய ராஜயோகத்தின் பலன்கள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் பெரும் நன்மைகளை அடைய போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மாளவ்ய ராஜயோகம்
சுக்கிரன் தற்போது மேஷ ராசியில் இருக்கிறார், ஜூன் 29, 2025 அன்று, மதியம் 13:56 மணிக்கு ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார். இதன் விளைவாக ஜூன் 2025 இல் மாளவ்ய ராஜ்யோகம் உருவாகிறது, இது 12 ராசிகளிலும் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஆடம்பரம், அன்பு மற்றும் அழகைக் குறிக்கிறது மற்றும் 1, 4, 7 அல்லது 10 வது வீடு போன்ற ஒரு கேந்திர வீட்டில் அதன் நிலையைக் குறிக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் அமர்ந்தால் அவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களை அனுபவிப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாளவ்ய ராஜயோகத்தால் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் திறக்கும். அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
மாளவ்ய ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த காலத்தில் அவர்களின் தொழில், சமூக அந்தஸ்து, அதிகாரம், புகழ் மற்றும் வாழ்க்கைத்தரம் உயரும். சுக்கிரன் அழகு, கலை, அன்பு, ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியாக இருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மாளவ்ய ராஜயோகத்தால் அவர்கள் தொழில் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும். அவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி, உயர் பதவிகளை அடைய வாய்ப்புள்ளது. கலை, இசை, நடிப்பு, ஃபேஷன் டிசைனிங், உள்துறை வடிவமைப்பு, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் புகழையும் செல்வத்தையும் அடைய முடியும். சமூகத்தில் அவர்களுக்கு அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை அடைய இது சிறப்பான காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் மனஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வியாபாரத்தை தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதனைகளை செய்ய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் . அவர்கள் தங்கள் திறன்களுக்கு ஏற்ற புதிய வாய்ப்புகளைக் கண்டறிய முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












