Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ள கஜகேசரி ராஜயோகம்: மே 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
Gajkesari Rajyog On May 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, சுப மற்றும் ராஜயோகங்களை அவ்வப்போது உருவாக்கி மனித வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தேவகுருவான குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 17 ஆம் தேதி சந்திரன் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் குரு மற்றும் சந்திரன் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சந்திப்பார்கள். இதனால் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. பொதுவாக கஜகேசரி ராஜயோகம் குருவும், சந்திரனும் ஒரே ராசியில் இருக்கும் போதோ அல்லது நேருக்கு நேர் பயணிக்கும் போதோ உருவாகும். அந்த வகையில் வருகிற மே 17 ஆம் தேதி குரு சந்திரனால் கஜகேசரி ராஜயோகம் உருவாகப் போகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இருந்தாலும் சில ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் குரு சந்திரனின் நிலைகளால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது ஏராளமான நன்மைகளை வழங்கப்போகிறது. அதுவும் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரகமா முடிவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலைமை மேம்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். உறவுகள் வலுவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். அதே சமயம் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக இந்த ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்தைத் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும். இதன் மூலம் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்த காலமாகும். பங்குச் சந்தை, லாட்டரி, பந்தயம் ஆகியவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வேத ஜோதிடத்தில், கஜகேசரி யோகம் என்பது குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனிலிருந்து கேந்திரத்தில் (1, 4, 7 அல்லது 10 வது வீடு) இருக்கும் போது உருவாகும் மிகவும் மங்களகரமான சேர்க்கையாகும். இந்த யோகம் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது பெரும்பாலும் பூர்வீகத்திற்கு செல்வம், புகழ், அறிவு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.
குரு, சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் ஒருவருக்கு நிதி ஆதாயங்கள், தொழில் வெற்றி, ஆன்மீக வளர்ச்சி, உள்ளுணர்வு மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. மேலும் கஜகேசரி ராஜயோகம் வெற்றி மற்றும் நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்கிறது. இது வேத ஜோதிடத்தில் ஒரு மங்களகரமான மற்றும் சக்திவாய்ந்த இணைப்பாகும்.
கன்னி, மிதுனம், சிம்மம்.



Click it and Unblock the Notifications











