குருவும் புதனும் வக்ரமாக இருப்பதால் நவம்பர் இறுதியில் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..

Jupiter And Mercury Retrograde 2024: ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதமானது மிகவும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் சில கிரகங்கள் ஒரே வேளையில் வக்ரமான நிலையில் பயணிக்கவுள்ளன.

அதில் ஏற்கனவே தேவர்களின் குருவான குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புத்திகாரகனான புதன் நவம்பர் 26 ஆம் தேதி விருச்சக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். தேவகுருவும், புதனும் ஒரே வேளையில் வக்ர நிலையில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Jupiter And Mercury Retrograde 2024 These Zodiac Signs Should Be Careful

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் குரு, புதனின் வக்ர நிலையால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள். இப்போது நவம்பர் இறுதியில் குருவும் புதனும் வக்ரமாக இருப்பதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

நவம்பர் இறுதியில் குருவும், புதனும் வக்ர நிலையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் பலவிதமான சவால்களை சந்திப்பார்கள். பணியிடத்தில் உங்களின் உங்களின் நம்பிக்கை குறையும். வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வியாபாரிகள் வியாபாரத்தில் சரிவை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் நஷ்டம் ஏற்படலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து கூட லாபம் எதுவும் கிடைக்காது. நிதி ரீதியாக, சற்று பலவீனமாகக்கூடும். செலவை கட்டுப்படுத்தாவிட்டால், பண பிரச்சனையால் சிரமப்பட வேண்டியிருக்கும்.

கடகம்

நவம்பர் இறுதியில் குருவும், புதனும் வக்ரமான நிலையில் பயணிப்பதால், கடக ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவுடன் எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். முக்கியமாக பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் பணத்தை கடனாக கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். வியாபாரிகள் நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் இருக்க வேண்டும்.

துலாம்

நவம்பர் இறுதியில் குருவும், புதனும் வக்ரமான நிலையில் பயணிப்பதால், துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலை மோசமாக இருக்கும். யாரிடமும் கடன் வாங்கிவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் திணறுவீர்ள். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. மூன்றாம் நபரால் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீட்டு சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். சற்று புத்திசாலித்தனமாக குடும்ப உறுப்பினர்களை கையாண்டால், உறவுகளில் விரிசல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion