Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்: பிப்ரவரி முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Guru Vakra Nivarthi 2025: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். அதோடு ஆண்டிற்கு ஒருமுறை வக்ர நிலையிலும் பயணப்பார். இப்படி குரு தனது நிலையை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 பிப்ரவரி 04 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.

இதனால் இதுவரை வக்ர குருவால் கஷ்டப்பட்டு, பல சிரமங்களை சந்தித்து வந்த ராசிக்காரர்கள், அதிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவுள்ளார்கள். இப்போது பிப்ரவரி முதல் வாரத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறப் போகிறார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறலாம். வியாபாரிகள் சில அழுத்தங்களை சந்திக்கலாம். பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
கடகம்
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் சில அழுத்தங்களை சந்தித்தாலும், வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணம் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் பல்வேறு துறைகளில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலில் பல வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications