Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்: பிப்ரவரி முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Guru Vakra Nivarthi 2025: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். அதோடு ஆண்டிற்கு ஒருமுறை வக்ர நிலையிலும் பயணப்பார். இப்படி குரு தனது நிலையை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 பிப்ரவரி 04 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.

இதனால் இதுவரை வக்ர குருவால் கஷ்டப்பட்டு, பல சிரமங்களை சந்தித்து வந்த ராசிக்காரர்கள், அதிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவுள்ளார்கள். இப்போது பிப்ரவரி முதல் வாரத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறப் போகிறார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறலாம். வியாபாரிகள் சில அழுத்தங்களை சந்திக்கலாம். பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
கடகம்
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் சில அழுத்தங்களை சந்தித்தாலும், வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணம் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் பல்வேறு துறைகளில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலில் பல வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications