Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Gajkesari Rajyog On Holi 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி ஒருவரது வாழ்வில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்தும். அதுவும் இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிரகங்களில் சந்திரன் மிகவும் குறுகிய நாட்களில், அதுவும் 2 1/2 நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். அதே சமயம் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். சந்திரன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையானது மார்ச் 14 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியில் ஏற்கனவே குரு பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகமானது ஹோலி நாளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் ஹோலி நாளில் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை தேடிக் கொண்டிருந்தால், புதிய வேலை கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்து பரிவர்த்தனைகளால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய வெற்றிகளை குவிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் புதிய வீடு, சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications