Just In
- 2 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 3 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 6 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 8 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரிழிவை சீராக வைக்கலாம்!!!
தற்போதைய நோய்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. இத்தகைய நோய் உண்மையில் முற்றிலும் குணமாகாது. ஆனால் அவற்றை அளவுக்கு அதிகமாகவிடாமல், சீராக வைக்க முடியும். இவை அனைத்தும் வாழும் வாழ்க்கை முறையைப் பொறுத்ததே ஆகும். ஆகவே நீரிழிவு இருப்பது தெரிந்துவிட்டால், பின் நிச்சயம் வாழும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும். இத்தகைய மாற்றங்களை மேற்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்க முடியும்.
ஆனால் அவ்வாறு வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வராவிட்டால், பின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரித்து, சில நேரங்களில் கண் தெரியாமல் கூட போய்விடும். மேலும் தற்போதைய அவசர உலகில் வாழ்க்கை முறையானது சரியாக இல்லை. அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு, அதிக வேலைப் பளுவினால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்பட்டு, உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, ஒருசில மாற்றங்களை அவ்வப்போது நிகழ்த்தினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீரிழிவு இருந்தாலும் அதிகரிக்காமல் இருக்கும்.
அதுமட்டுமின்றி, நீரிழிவைக் கட்டுப்படுத்த மருத்துவர் கொடுத்த போதிய மருந்துகளையும் மறக்காமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது எத்தகைய மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போமா!!!