Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்...
நீங்க திருமணம் செஞ்சிக்க போறீங்களா? அப்ப இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்...இல்லனா பிரச்சனையாம்!
நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்கிறார்களா? எல்லோரும் உங்களை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி காட்டாயப்படுத்துகிறார்களா? ஆம். எனில், உங்களுக்கு திருமணம் பற்றி கூறப்படும் பல விஷயங்கள் யதார்த்தமற்றதாகவும் தவறாகவும் இருக்கலாம்.
திருமணம் உங்களுக்கு கொண்டு வரும் கடுமையான யதார்த்தங்களை யாரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். திருமணமான தம்பதிகளின் மகிழ்ச்சியான படங்களைப் பார்க்கும்போது, அனைவரும் திருமண உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாக நாம் நம்புகிறோம். ஆனால், அவை அப்படியில்லை. திருமண உறவில் பல விஷயங்கள் உள்ளன.

திருமண உறவு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதன் மறுபுறம் பெரும்பாலும் உங்களுக்கு சொல்லப்படாமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாம்பத்திய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் முன் இந்த உண்மைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணத்தைப் பற்றி யாரும் சொல்லாத உண்மைகளைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
திருமணத்தில் காதல் உருவாகிறது
உண்மையான காதல் என்பது பகிரப்பட்ட அனுபவங்கள், நம்பிக்கை மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் திருமணமான தம்பதிகள் இருவருக்கும் ஒரே இரவில் கிடைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் காலம் நேரம் எடுக்கும். திருமண உறவில் காதல் இரண்டு வழிகளிலும் உருவாகிறது.
ஒன்று நேரம் மற்றும் முயற்சியால் காதல் வளர முடியும். இருப்பினும், காலம் செல்ல செல்ல காதல் குறைய ஆரம்பிக்கலாம். ஆரம்பகாலத்தில் எழுந்த தீவிர காதல் உணர்வுகள் முயற்சியுடன் ஆழ்ந்த, முதிர்ந்த அன்பாக பரிணமிக்கலாம். ஆனால், நினைவில் கொள்ளுங்கள், உணர்ச்சிமிக்க தேனிலவு கட்டம் அற்புதமாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு அது நிலையானது அல்ல. உணர்வுப்பூர்வமான நெருக்கமே உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க உதவும்.
திருமணம் என்றென்றும் உத்தரவாதம் அளிக்காது
வாழ்நாள் முழுவதும், "நீங்கள் சந்திக்கிறீர்கள், காதலிக்கிறீர்கள், மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள்" என்ற கதை திருமணத்தின்போது அதிகம் கூறப்படுகிறது. இருப்பினும், இது உண்மையாக அடையக்கூடியதா, அல்லது இது கற்பனைகளுக்காக கூறப்படுகிறதா? எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
உங்கள் காதல் வலுவாகவும் உண்மையானதாகவும் இருந்தால் உங்கள் துணையுடன் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்கலாம். ஆனால், அவ்வாறு இருக்க திருமணம் என்றென்றும் உத்தரவாதம் அளிக்குமா என்றால், இல்லை என்றே பதில் வரும். தாலி கட்டும்போது முடிச்சுகள் போடப்படுவது என்பது நீங்கள் என்றென்றும் பிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல.
உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் உங்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால், அந்த திருமண உறவை எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். உங்கள் திருமணத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், விவாகரத்து செய்வது அல்லது உங்கள் துணையை விட்டு வெளியேறுவது மோசமான விஷயம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை
திருமணத்தில் ஏராளமான காதல் தருணங்கள் இருப்பதாக நாம் பார்த்து ரசிக்கிறோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் சவால்கள், மோதல்கள் மற்றும் ஒன்றாக நிர்வகிக்க வேண்டிய சாதாரணமான பணிகள் போன்ற நிறைய விஷயங்கள் இதில் அடங்கி இருக்கின்றன.
சிறிது காலம் கழித்து தம்பதிகள் திருமண உறவில் சலிப்படையாலாம். தம்பதிகள் இருவரும் காலப்போக்கில் மாறலாம் மற்றும் மாறாமலும் இருக்கலாம். ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதும் ஆதரவளிப்பதும்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
திருமணம் உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்காது
உங்கள் உறவினர்களும், நண்பர்களும் திருமணம் என்பது உங்கள் எல்லா பிரச்சனைகளையும் பற்றிகொண்டு பறந்து செல்லும் மந்திரக்கோல் என்று சொல்வார்கள். ஆனால் இது அப்படியல்ல. திருமணம் செய்துகொள்வது, உங்கள் எல்லா பிரச்சனைகளையும் மாயமாக தீர்க்காது.
இருப்பினும், பிரச்சனைகளை தீர்க்க உங்கள் துணை உங்களுக்கு உதவலாம். ஆனால், திருமணம் அதற்கு உத்தரவாதம் அளிக்காது. உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் வேலை செய்வது அவசியம். திருமணம் உங்களுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்று நினைக்க வேண்டாம்.
திருமணத்திற்கு நிலையான உழைப்பும் முயற்சியும் தேவை
திருமணத்திற்கு இரு கூட்டாளிகளிடமிருந்தும் தொடர்ச்சியான முயற்சி மற்றும் முதலீடு தேவைப்படுகிறது. திருமணம் என்பது ஒரு ஆற்றல் மிக்க உறவாகும். அது வளர வளர்ப்பும் கவனமும் தேவை. காதலை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு நனவான முயற்சியும் நேரமும் மிக அவசியம்.
ஆச்சரியமூட்டும் ரொமான்ஸ், டேட்டிங் இரவுகள் மற்றும் சிறிய முயற்சிகள் உறவில் தீப்பொறியைத் தக்கவைக்க உதவும். திருமணத்திற்கு உழைப்பும் பொறுமையும் தேவைப்படுகிறது. நீங்கள் ஒருவரையொருவர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், விருப்பு வெறுப்புகள், தூண்டுதல்கள் எல்லாம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்
நீங்கள் எவ்வளவு இணக்கமாக தம்பதிகளாக இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் தவிர்க்க முடியாதவை. ஆக்கபூர்வமான முறையில் மோதல்களை எவ்வாறு வழிநடத்துவது மற்றும் தீர்ப்பது என்பதை கற்றுக்கொள்வது ஆரோக்கியமான திருமணத்திற்கு அவசியம்.
திருமணம் என்பது நீங்கள் இருவரும் ஒரே அடையாளமாக மாறுவீர்கள், எல்லாவற்றிலும் எப்போதும் உடன்படுவீர்கள் என்று அர்த்தமல்ல. ஒவ்வொருவருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கும், மேலும் பல நேரங்களில் உங்களுடைய கருத்துக்கள், உங்கள் துணையின் கருத்துடன் மோதும். ஆதலால், திருமண உறவு மகிழ்ச்சியாக மட்டுமே செல்லாது.
திருமணம் உங்களை நிறைவு செய்யாது
திருமணம் செய்வதுகொள்வது உங்கள் வாழ்க்கையை நிறைவு செய்யும் என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உண்மை அப்படி இல்லை? திருமணம் செய்யும் இருவருக்கும் பல்வேறு விருப்பங்கள் மற்றும் கனவுகள் இருக்கும்.
ஒரு திருமணத்தில், இரண்டு முழுமையான நபர்கள் பங்குதாரர்களாக வருகிறார்கள். ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த நல்வாழ்வு மற்றும் முழுமைக்கு பொறுப்பு. திருமணம் அல்லது உங்கள் பங்குதாரர் உங்களை நிறைவு செய்யவில்லை என்றால், நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தால் அப்போதும் நீங்கள் முழுமையடைய மாட்டீர்கள். முழுமை என்பது நீங்களாகவே உணருவது.



Click it and Unblock the Notifications












